தென்மலைக் "கான்" காதர் சாஹிப் ஹமீது சுல்த்தான்

>> Wednesday, July 22, 2009

இளையான்குடி வரலாற்றில், திருநெல்வேலி மாவட்டம், தென்மலை என்ற ஊரில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் "தென்மலைக்கான் வகையறா" என்று அழைக்கப்படுவதாக நாம் அறிகிறோம்.

நமதூரில் தென்மலைக்கான் என்றதுமே நினைவுக்கு வருபவர்கள் மர்ஹூம். அல்ஹாஜ் T.K.H. அவர்களே! ஏனெனில் அவர்கள் செய்த நற் செயல்களின் பலனாக..

ஹாஜி காதர் சாஹிப் அவர்களுக்கும், ஜனாபா பொன்னம்மாள் பீவீ அவர்களுக்கும் 1909 ம் ஆண்டு மே மாதம் இளைய மகனாகப்பிறந்தார்கள்.

ஹாஜி.அப்துல் மஹ்மூத் அவர்கள், ஹாஜியானி ஜெமிலா பீவீ அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

இவருடைய துனைவியர் பெயர் ஹாஜியானி மரியம் பீவீ ஆவார்கள்.

இத் தம்பதிகளுக்கு 3 பெண் மக்களும் (ஜனாபா. ஷெரிஃபா பீவீ, ஜனபா ஃபைரோஸா பீவீ, ஜனாபா சமீம் ஷிரா) 3 ஆண் மக்களும்(டாக்டர்.முஹமது ஃபிர்தவ்ஸ், ஜனாப்.முஹமது ஃபாரூக், ஜனாப் முஹமது ஃபரிஸ்டா) உள்ளார்கள்

T.K.H. அவர்களின் 8 வது வயதிலேயே தன்னுடைய தாயாரை இழந்து, சகோதரி ஜெமிலா பீவீயாலும். தகப்பனார் காதர் சாஹிப் அவர்களாலும் பிரியமிகு பிள்ளையாக வளர்ந்து வரும் வேலையில், தன்னுடைய 10வது வயதில், தகப்பனாருடன் பினாங்(மலேயா) சென்று, கல்வி கற்று, அங்குள்ள ஸ்கூல் உயர் படிப்பான 'கேம்ப்ரிட்ஜ்' O 'லெவெல் படிப்பை 1925 ல் நிறைவு செய்தார்கள். தன்னுடைய 16 வது வயதில், தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் முதல் முயற்சியாக, பினாங்கிலேயே, ஹாஜி K.M..சுல்த்தான் அலாவுதீன் அன்ட் சன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,கப்பலில் சரக்கு ஏற்றி, இறக்கும் கம்பெனியில் வேலையில் சேர்ந்து, படிப்ப‌டியாக, முன்னேற்றப்பாதையில், சிறிதும் சறுக்காமல், நல்லதொரு வளர்ச்சியினை அடைகின்ற வேளையில்...

இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய இரானுவம், மலேயாவை கைப்பற்றியதனால், ரானுவம் எல்லா வியாபாரத்தலங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததின் காரணமாக, எல்லா வியாபாரிகளும் ஆதிக்க சக்திக்கு பயந்து, காடுகளில் ஒளிந்து .மறைவு வாழ்க்கையில் ஈடுபட்டது போல், T.K.H அவர்களும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

போருக்குப்பின், பினாங்கில் T.K.H. அவர்கள் துணிந்து தன்னுடைய வியாபாரகளத்தில், உணவுப்பொருட்கள், மருந்து வகைகள் வியாபாரத்தில் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்..

பின் வரும் நாட்களில். தன்னுடைய வியாபாரத்தை, மலேயாவிலிருந்து, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து கராச்சியிலும், சிட்டஹாங்கிலும், தன்னுடைய வியாபாரத்தை நிலை நிறுத்தியும், சீறும் சிறப்புடனும், 1971 வரை வெற்றிகரமாக நடந்து வரும் வேளையில், இந்திய‍ பாகிஸ்தான் போரினால்.வியாபாரம் நடத்த முடியாமல், பாகிஸ்தானில் வியாபாரத்தை மூடி விட்டு சென்னை திரும்பினார்.

இவருடைய வாழ்க்கையில் 2 பெரிய போர்கள் விளையாடி இருக்கின்றன.. எல்லாம் நன்மைக்கே.. அல்லாவின் கருணையினால்..

சென்னையில் 1973ம் ஆண்டு, புதிய மகாபலிபுரம் ரோட்டில் (VGP அருகில்) ஹம்மா(HAMMA) ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஆரம்பித்து, கட்டுமான வேலைக்குண்டான ஸ்டீல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தும், இதன் மூலம் பல ஆட்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும், வியாபாரமும், பொது நற்காரியங்களும் செய்து வரும் வேளையில்....

1999ம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ம் தேதி, தன்னுடைய 90 வது வயதில் வபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)






ஒரு மனிதன், உலகத்தின் எல்லா மூலை, முடுக்குகளில் சுற்றி வந்து வியாபாரம் செய்திருந்தாலும், தான் பிறந்த மண்னையும், தன்னை உருவாக்கிய தந்தையையும் எவ்வளவு நேசித்திருப்பார்கள் என்பதற்கு சான்றாக, T.K.H. அவர்களின் எண்ண‌மும், ஆசையுமாகவும், இதயத்தின் உறுதியும் தான், அவர் வபாத் ஆனவுடன், தான் பிறந்த மண்ணிலேயும், தன் 10 வயதில், எப்படி இவ்வுலக வாழ்க்கைக்கு வழிகாட்டிய‌ தன் தக‌ப்பனாருடன் சென்றாரோ, அதுபோல் அவரது 90வது வயதிலும், தகப்பனாருடைய கபர்ஸ்தான் பக்கத்திலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்ற "ஹாஜத்தை" அவருடைய பிள்ளைகள் நிறைவேற்றிணார்கள்....

இவருடய நற்காரியங்களில் சிலவற்றின் தொகுப்பு:

1) இளையான்குடியில் "THENMALAIKHAN EDUCATIONAL TRUST' உருவாக்கியது.

2) இளையான்குடியில் பெண்களுக்காக ஒரு தனி உயர் நிலைப்பள்ளி உருவாக்கியதில் ஒருவரும், இப்பள்ளிக்காக, தன்னுடைய தாயார் நினைவாக‌ "பொன்னம்மாள் காதர் சாஹிப் பெண்கள் உயர் நிலைப்பள்ளி'" என்ற பெயரில் ஒரு கட்டிடத்தைக்கட்டி கொடுத்தவரும் இவரே!

3) சென்னையில் 'UNITED ECONOMIC FORUM' நிறுவன உறுப்பினராக இருந்துள்ளார்கள்.

4) இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில், "இஸ்லாமிய கலை களஞ்சியம்" என்ற கட்டிட வளாகத்தை கட்டி அர்ப்பனித்துள்ளார்கள்.

5)இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் "காதிரியா மஸ்ஜித்" உருவாக்கிய பெருமையும் இவரைச்சாரும்.

6)இளையான்குடி, INPT ஜமாத்துக்காக சிங்காரத்தோப்பில் ஜூம்மா பள்ளி நிறுவியவரும் இவரே.

7) சிவகெங்கை இளையான்குடி ரோட்டில், சாத்தரசன்கோட்டை என்ற ஊரில் "காதிரியா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.

8)சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவிலில்,"முஹமதிய மஸ்ஜித்" உருவாக்கி வக்ப் செய்துள்ளார்கள்

9) பரமக்குடியில், பாரதி நகரில் "ஜும்மா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.



இவரிடம், நாங்கள் அதிசயித்த விசயம் இவருடைய எளிமை. பந்தா, பகட்டு என்று ஏதும் அறியாதவர். INPT பள்ளிக்கு அன்றையகால கட்டத்தில், ந‌டந்த‌ சில முக்கியமான நிகழ்வுகளுக்கு, இவருடைய பங்கு போற்றதக்க‌தாகும்.

இன்று இவர்கள் நம்முடன் இல்லை, ஆனால் இவர் உருவாக்கி விட்ட கல்வி, மற்றும் இஸ்லாமிய ஸ்தாபனங்கள், பள்ளிகள் இவருடைய பெயரையும், புகழையும் அழியா வண்ணம், எப்படி "பூ வாடி விட்டாலும் அதனுடைய வாசனையை முகர்ந்தவர்கள் மறக்க மாட்டார்களோ" அதைப்போல், இளையான்குடி மக்களும் TKH எனும் மலரை மற‌க்க மாட்டார்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன்....

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் TKH அவர்களின் இளையமகனார் ஜனாப். முஹமது ஃபரிஸ்டா அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி)

ஜனபா யாஸ்மின் அவர்களின் "கமென்ட்ஸ்" படி இந்த வாக்கியம் நீக்கப்படுகிறது. வாசகருக்கு நன்றி

WEBADMIN HOME

Read more...

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP