எட்டாம் வெளிச்சம்-திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்

>> Friday, January 22, 2010

திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்.

இளையான்குடியைப் பொருத்தவரை மேலப்பள்ளி ஜமாத்,நெசவுப்பட்டடை ஜமாத், சாலை, புதூர் ஜமாத் ஆகிய‌ ஜமாத்துக்களுக்கு சமமாக "செட்டியார்" சமூகமும், ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நேரம் அது.

இப்பொழுது நிறைய செட்டியார் சமூகத்தைச்சார்ந்தவர்கள் வியாபார நிமித்தமாய், உறவின் காரணமாயும் ஊரை விட்டு மதுரை, கோயம்புத்தூர் என்று பல ஊர்களுக்கு குடி பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஊரில் முக்கிய நிகழ்வுகளுக்காகவும், கோவில் விஷேசங்களுக்கும், உறவினர்கள் விஷேசத்திற்க்கும் வந்து, போய், இளையான்குடியுடன் கலந்து, ஒற்றுமை மாறாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது மிக சந்தோசமான செய்தி அல்லவா?

இளையான்குடியில் பெரும்பாலும் செட்டியார் சமூகம் 'ஆயிர வைசிய' பிரிவைச்சார்ந்தவர்கள் என்று சரித்திரம் எடுத்துரைக்கிறது.

இப்படி செட்டியார் சமூகத்தில் ஊருக்கென்று பொது ஸ்தாபனங்களுக்கு தானமாக இடம், பொருள், உழைப்பு என்று வழங்கியோர் பலருண்டு. இதில் எள்ளளவும் மாற்று கருத்து கிடையாது. இளை.வெளிச்சத்தில் முன்பே பதிப்பான‌ 'இரண்டாம் வெளிச்சத்தில்' ஆரம்ப பள்ளி ஆரம்பித்த திரு.அண்ணாமலை செட்டியார் அவர்களைப் பார்த்தோம்.

இந்த செட்டியார் சமூகத்தில் இளையான்குடியில் பிறந்து, ஊருக்காக பல வகைகளில் உழைத்தவரும், நல்ல பண்பாளரும், அமைதியும், அடக்கமும் உடையவரும் எல்லோருடனும் பழகுவதற்க்கு எளிமையானவருமான "திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார்" அவர்களை இங்கு "வெளிச்சம்" ஆக வெளியிடுவதில் திருப்தியடைகிறோம்.

இவரைப்பற்றி சொல்லும்போது, முதன்மையாக சொல்ல வேண்டுமெனில் இவர் சிறந்த பக்திமான்.. கடவுள் மீது அதிக பற்றுள்ளவர், இதற்கு எடுத்துக்காட்டாக, இளையான்குடியின் புரதான சின்னமாக விள‌ங்கும் பெருமாள் கோவிலின் ராஜ கோபுரத்தை 1942ல் கட்டி, கோவிலுக்கு சிறப்புச்செய்தார்.

இளையான்குடியில் முதன் முதலாக 1960ல் காஃபித்தூள் அரைக்கும் மிஷினை நிறுவி, "விக்டர் காஃபி ஒர்க்ஸ்" என்ற நிறுவனத்தை நிறுவினார். இதனால் சுற்று வட்டாரம் யாவும் 'ஃப்ரஷ்ஷாக' காஃபித்தூள் கிடைத்து, மக்கள் "பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு" என்று குதூகலிக்க வைத்தவர்.

இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத்தில் 3, 4, 5வது கமிட்டியில் உறுப்பினராக இருந்து, நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கியுள்ளார்..

இளையான்குடி கல்லூரிக்கழகம் 1968ல் ஆரம்பிக்கும்பொழுது, செயற்குழு கமிட்டியில் மெம்பராக இருந்து "கல்லூரிக்காக 50 ஏக்கர் நிலம் தேவை என்றும், இதைபெற மக்களிடம் யூனிட் முறையில் பணம் பெறுவது என்றும், ஒரு யூனிட்டின் விலை ரூபாய் 300/= என்றும் " ஒரு அரிய திட்டத்தைக்கொண்டு வந்தவர் இவரே.. இவரும் தன் பங்காக 2 யூனிட்(ரூ 600/=) வாங்க நிதி அளித்துள்ளார்கள்..

இவர்கள் வாழும் வரை ஊருக்காக பல தான தர்மங்கள் வழங்கியதற்கான ஆதாரமாக கீழே இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கமும், இளையான்குடி கல்லூரிக்கழகமும், இவருடைய ஷஷ்டியப்த பூர்த்தியின் போது வெளியாக்கிய பாராட்டு மடல்.
இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கம்‍ - பாராட்டு மடல்.

CLICK TO ENLARGE


இளையான்குடி கல்லூரிக்கழகம் - பாராட்டு மடல்



இவருடைய குடும்பம் பற்றி:


இவர்களுடைய துனைவியார் திருமதி மீனாம்பாள் அம்மையார் அவர்கள்

இத்தம்பதியினருக்கு 2 ஆண் மக்கள், 3 பெண் பிள்ளைகள், ஆண் மக்களில் மூத்தவர் திரு சந்திரன், இளையவர் திரு நடராஜன்.

பெண் மக்கள் திருமதி புஷ்பம், திருமதி சரோஜா , திருமதி தேவி ஆகியோர் ஆவார்கள்..
CLICK ON THE PHOTO TO ENLARGE.

திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்.
"வாழ்ந்தால் உங்களைப்போல் நல் மனிதராக‌ வாழ வேண்டும்"

தகவல்கள் வழங்கியது திரு S.P சந்திரன
********

நிர்வாகம்
Home

Read more...

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP