ஏழாம் வெளிச்சம்-அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்:

>> Friday, December 18, 2009


"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" - அறிஞர் அண்ணாதுரை..

இளையான்குடியில் பிறந்து, சட்டத்தின் இருட்டறையில் புகுந்து, விளக்கு(வெளிச்சம்) ஏந்தி
சட்டத்திற்கும், இளையான்குடிக்கும் பெருமை சேர்த்தவர் எவரோ? அவரே
அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்..

இளையான்குடியில், ஆங்கிலேயர் காலத்திலேயே கிராம அதிகாரியாக (ஹெட் மேன்) நியமனம் பெற்று, வளையாத 'ஹெட்மன்' என்று பெயரெடுத்த ஜனாப் கு.சிக்கந்தர் பாட்சா அம்பலம், ஜனாபா சபுர்ஹான் பீவீ ,தம்பதிகளின் மூன்று புதல்வர்களில் 'இளையவராக'
15/07/1930ல் பிறந்தார்.

இளம் வயதில், எல்லோரும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த, ரஹ்மானியா உயர் ஆரம்பப்பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி முடித்து, பின் பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி போர்ட் உயர்நிலைப்பள்ளியில் பயின்று விட்டு, ம‌துரை, அமெரிக்கன் கல்லூரியில் B.A. பட்டப்படிப்பை கற்று, பட்டதாரியாகி, சட்டம் பயில வேண்டி, மெட்றாஸ் சட்டக்கல்லூரியில் B.L. பட்டம் வாங்கி 1956ல் வழக்கறிஞர் ஆகிறார்.

மதுரையில் புகழ் பெற்ற, மூத்த வழக்கறிஞர் திரு M.S..கிருஷ்னஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் Apperentice ஆக சேர்ந்து பணியாற்றிவிட்டு, பின் 19/12/57 முதல் 1961 வரை மதுரையில் வக்கீலாக பயிற்ச்சியில் இருந்தார்.

1961 லேயே ,சென்னை வந்து மதிப்பிற்குரிய ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்களிடம் ஜூனியராக தன் திறமையைகாட்டி வந்துள்ளார்கள்.பின் மதிப்பிற்குரிய மேதகு ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்கள் நீதியரசராக வீற்றிருந்து 'நீதி' யை நிலை நிறுத்தி வந்துள்ளார்கள் .இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்தார்கள்

அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்,உயர் நீதி மன்ற‌த்திலும், சார்பு நிலை நீதி மன்றத்திலும். ட்ரிப்யூனலிலும், வழக்காடி நல்லதொரு மூத்த வழக்கறிஞர் என்ற பெயரை நிலை நாட்டினார்கள்..

இவருடைய திறமையின் பயனாக, 1989ல், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி அரசாங்கத்தின், அரசு சார்பு Pleader ஆகவும், பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆகவும் சென்னை உயர் நீதி மன்றத்தில், 4 ஆண்டுகள் பதவி வகித்து வந்தார்கள்

பாண்டிச்சேரியின், Anglo French Textiles Ltd கம்பெனியின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார்.

02/04/2002ல். பாண்டிச்சேரி அரசின் மனித உரிமைக்கமிட்டியின் மெம்பராக‌, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் நியமனம் செய்கிறார்கள். பாண்டிச்சேரி மனித உரிமை கமிட்டியில் .மேதகு நீதியரசர் P. தங்கமனி அவர்கள் (Madras High Court) சேர்மனாகவும், ஜனாப் K.S.அஹமது அவர்களும் ,Sister சேவியர் மேரி அவர்களும் அங்கம் வகித்தனர் .

இவருடைய குடும்பத்தை பற்றி: இவர்களது துனைவியார் பெயர் ஜனாபா. சபியாள் பேகம், இத் தம்பதிகளுக்கு, இரண்டு பெண் மக்களும், இரண்டு ஆண் மக்களும் உள்ளனர்

இவரது மூத்த மகனார், Dr. உஸ்மான் அலி அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளார்.. தற்சமயம் சென்னையை அடுத்த திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் Senior Civil Surgeon ஆகப்பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இளைய மகனார், ஜனாப் அப்துல் ஜலீல் அவர்கள், அரப் அமீரகத்தில் வேலை செய்துவிட்டு ,சென்னை வந்து Textile தொழிலில் ஈடுபட்டுள்ளார்
.

Advocate K.S.Ahamed.B.A.B.L




இவரைபற்றி பொதுவாக:

அம்பலமா? என்பதை நம்பலாமா? என்பதற்கேற்ப, யாரையும் இவர் சீண்டியதும் ,தீண்டியதும் இல்லை..

சினமும், சீறுவதும் நீதி மன்றத்தில் வழக்காடும் போதுதான்..

மனித நேயம், பிறர் கேட்காமல் செய்யும் உதவிகள், பல ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச்செய்தல்..

இவரிடம் "Case" கட்டுகள் அதிகமாக இருந்தாலும், "Cash" கட்டுகள் அதிகம் பெற்றதில்லை..

எந்தவொரு வழக்கும், தன் மனதுக்கு நியாயமாக பட்டால் மட்டுமே, வாதாடுவார்கள்..

ALIM Engineering College க்கு ஸ்தாபக சட்ட ஆலோசகராக இருந்துள்ளார்கள்..

இவரிடம் ஜூனியராக பணியாற்றியவர்கள், இன்று உயர் நீதி மன்றத்தில் நல்ல புகழோடு வாதிடுகிறார்கள்..

இவர்கள் நிச்சயமாக "நீதிபதி" ஆகியிருக்க வேண்டும்..ஆனால்?!

2007 ம் வருடம் நவம்பர் மாதம் 21ந்தேதி சென்னையில் வபாத் ஆனார்கள்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..


தகவல்கள் வழங்கியவர் K.S.A. அப்துல் ஜலீல் அவர்கள்..

நிர்வாகம்

Home

3 comments:

shyla December 19, 2009 at 1:03 AM  

Thanks to ilayangudiyin velicham for posting such a wonderful biography on our grandfather.. He's truly a legend... it would ve been better if he had been with us for longer.. he was the best grandpa anyone could ever have.. and a humble being... we miss him a lot.. May his soul rest in peace..
-Haseeb , Shyla

zulfi December 21, 2009 at 3:38 PM  

மதிப்பிற்க்கும்,மரியாதைக்கும் உரிய அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள் ஒரு மிக சிறந்த,நேர்மையான,எளிமையான,அனுகுவதற்க்கு இலகுவான மனிதர்.

நான் 2003ஆம் ஆண்டு சென்னையில் வேலை தேடி அலைந்த நேரத்தில்,அவரிடம் உதவி கேட்டு சென்றேன். உதவி கேட்ட உடனே எனக்கு வேலை வாங்கி தர வேண்டி,சென்னை சதக் கல்லூரி மற்றும் சென்னை புதுக்கல்லூரியில் பெரும் முயற்ச்சி செய்தார். ஆனால் மயிரிலையில் அந்த வாய்ப்பினை நான் தவற விட்டுவிட்டேன்.

அவர் சென்னையில் வசித்த வாடகை விட்டுக்கு சென்றுக்கிறேன். அங்கு எந்த ஒரு ஆடம்பர பொருளை நான் காண இயலவில்லை. அவருடைய இந்த எளிமை அவருடைய நேர்மைக்கு சான்று. அவர் இருக்கும் சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவிலிருந்து சென்னை உயர் நீதி மன்றத்திற்க்கு சைக்கிள் ரிக்க்ஷாவில் செல்வதை பலமுறை கண்டுருக்கிறேன்.

எளிமை,நேர்மை,இனிமை மற்றும் உதவும் தன்மை இது தான் மதிப்பிற்க்கும்,மரியாதைக்கும் உரிய அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்.
எல்லா வல்ல இறைவன் அவருக்கு நல்லருள் புரிவானக. ஆமின்.
அவருடைய குடும்பத்தினர் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாகுவதாக.

ARAFATH N December 22, 2009 at 12:08 AM  

Thanks to ilayangudiyin velicham for posting such a nice biography on our grandfather......he is lived his life very simple,he has shown a right path to all of us,he is true to everyone,i pray to allmighty that may his soul rest in peace......by N ARAFATH.......

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP