அன்று கல்லூரிக்கு கிள்ளிப்போட்டாரா! அள்ளிப்போட்டாரா!

>> Monday, January 9, 2012

மறைக்கப்பட்டு வரும் உண்மை,

இன்னும் இளையான்குடி பொது மக்கள் அறிந்தும் அறியாமல் வெளியில் 
காட்டிக்கொள்ளாமல்  இருப்பவர்களுக்கும், மறைத்து வைத்தது மறைந்தே இருக்கட்டும் என்றும், இன்று கல்லூரியில் பதவிக்கு வந்து விட்டால் ஒரு வழியாய் அவரவர் கணவு நிறைவேறிவிடும் என்ற மமதையில் இந்த உண்மையை மறைக்கப்பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கும், இப்படி கல்லூரிக்கு கொடுத்ததாக சொல்கிறார்களே!  இது உண்மையா? என்ற சந்தேக கண்கொண்டு பார்ப்பவர்களுக்கும், குறிப்பாக இளை. இளைய சமுதாயத்தினருக்கும் 
 சமர்ப்பனம்..


             Page 1                                                                                                             Page 2
Click to Enlarge

     Page 3                                     Page 4                                                Page 5

EC For Donated Land

கல்லூரிக்கு அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் அளித்த நில‌ தான‌ ப‌த்திர நகலின் சாராம்ச‌ம்:


ரூ.3000.00 மதிப்புள்ள தான செட்டில் மெண்டு பத்திரம்

1970ம் வருஷம் ஏப்ரல் மீஉ 20உ இருபது தேதிக்கு சாதாரன வருசம் சித்திரை மீஉ 12 உ.
இளையாங்குடி கல்லூரிகழகத்திற்காக காலேஜ் சொசைட்டிக்காக சிவகங்கையிலிருக்கும் கிழக்கு ராமநாதபுரம் மாவட்ட பதிவகத்தில் S 64/1968 ம் எண்ணாக பதிவு செய்திருக்கிறபடி மேற்படி கழகத்தலைவரும் பிரதிநிதியுமான இளையாங்குடி டவுன் ஹவுத் அம்பலம் தெரு 9ம் என் உள்ள இடத்தில் வசிக்கும் ஜனாப் வி.காதர் அம்பலம் அவர்கள் குமாரர் வியாபாரம் விவசாயம் ஜனாப் V.K. இபுறாஹிம் அலி அம்பலம் அவர்களுக்கும் இனிமேல் மேற்படி ஸ்தானத்தை வகிப்பவர்களுக்கும் இளையாங்குடி டவுன் ஊரணிக்கரைத் தெரு 27 நிர் வீட்டில் வசிக்கும் வாஞ்சூர் முஹமது அவர்கள் குமாரர்  விவசாயம் வியாபாரம் ஹாஜி V.M.பீர்முஹமது அவர்கள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டுப் பத்திரம்இளையான்குடி வட்டாரத்தில் மக்கள் கல்வி வளர்ச்சிக்குத்தேவையான கல்லூரி ஆரம்பிக்க வேனுமென்றும் நீடித்த காலமாய் எனக்கு இருந்த எண்ணத்தின்படி மேலேகண்ட கல்லூரிக்கு நிலம் தேவைப்படுவதாகத்தெரிந்து,மேற்படி பொதுக்காரியத்திற்காக தர்ம சிந்தனையாய் நான் 19.04.1970ல் ஆ.க.நாஹூர் கனி ராவுத்தருக்காக மேற்படியாரின் பவர் ஏஜண்டாகிய இளையாங்குடி ந.சி.ரா.அபுத்தாஹிர் அவர்களிடமிருந்து ரூ 2500.க்கு நான் கிரையபத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்து வாங்கிய மூலம் எனக்கு பாத்தியமான அனுபவமான தற்கால மதிப்பின்படி ரூ 3000 ரூபாய் மூவாயிரம் பெறுமானமுள்ள கீழ்கண்ட புஞ்சை நிலத்தை மேற்படி கல்லூரிக்கழகக் காரியத்துக்காக இந்த தான செட்டில்மெண்டு மூலமாக நான் பாத்தியப்படுத்தி வைத்து சொத்தின் சக‌ல விதப் பொஷிஸன் வகையராவையும் மேற்படி கல்லூரிக்கழகத் தலைவர் முறையில் தங்களிடம் நான் ஒப்புவித்துவிட்டதால் தாங்களும் தங்கள் ஸ்தானங்களைப்பின் வகிப்பவர்களும் சர்வ சுதந்திரப் பாத்தியமாய் என்றென்றைக்கும் இஷ்டப்படி ஆண்டனுபோகம் செய்து கொள்ள வேண்டியது.
மேற்படி சொத்துக்குண்டான பட்டாவை மேற்படி கல்லூரியின் பெயரில் மாற்றுவதற்க்கு மேற்படி நமூனாவும் கொடுத்திருக்கிறது மேற்கண்ட என் பெயரிலுள்ள ரிஜிஸ்தர் கிரையப்பத்திரமும் இத்துடன் இருக்கத்தக்கது.

சொத்து விபரம்

கிழக்கு ராமநாதபுரம் ரிடி இளையாங்குடி சப்டி இளையாங்குடி துனைத்தாலுகா, இளையாங்குடிடவுன் பஞ்சாயத்து இளையாங்குடி கிராமம் தெற்கு வட்டத்தில்
இளையாங்குடி பரமக்குடி  ரஸ்த்தாவுக்கும் கிழக்கு, சர்வே 212/2 நிர் கு.சி.ஜெயினுலாபுதீன் அம்பலமிடமிருந்து கல்லூரிக்கு ஏற்கனவே கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் தெற்கு, சர்வே 211/2 நிர் இ.அப்துல் ரஜாக்கு வகையராவிடமிருந்து மேற்படி கல்லூரிக்கு கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் மேற்கு,சர்வே 213 நிர் பொ.அ.ந.காதர் மீறா புஞ்சைக்கும் வடக்கு. இதற்குள்ளான 342 நிர் பட்டாவில் கண்ட‌சர்வே 212/3 நிர் புஞ்சைத்தாக்கு 1க்கு ஏ.2 செண்டு 78 ஏக்கர் இரண்டு செண்ட் எழுபத்திஎட்டு இதற்கு  1.12.51.ஆர் மேற்படி நிலம் தற்கால மதிப்பு ரூ 3000 பெரும்.
                                                                                           Sd. V.M.PEER MOHAMED

சாஷிகள்:

1)  A.M.Syed Ibrahim S/o  A.E. Mohamed Ali. Ilayangudi..

2) முத்துவேல் பிள்ளை.ஹெட்மேன்.S/o. உரும‌ன‌ப்பிள்ளை அரியாண்டிபுர‌ம்.

இது எழுதிய‌து  இளையாங்குடி முத்து ராக்கு பிள்ளை ம‌க‌ன் தெ.மு.ந‌ட‌ராஜ‌ன் பிள்ளை



0 comments:

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP