முதல் வெளிச்சம்

>> Thursday, April 9, 2009

இளையான்குடி:‍‍‍‍ இந்த பெயர் எப்படி வந்தது,இதன் வரலாறு என்ன? என்பதை பல கருத்துக்கள்!. சில புத்தக வாயிலாகவும்,சில ஊடகங்கள் வாயிலாகவும் நாம் நன்கு அறிவோம்..இதற்கு விளக்கம் தேவையில்லை..


ஆனால் ஒரு ஊர் என்றால், அது அங்கு வாழும் மக்களின் விகிதாசாரப்படி பள்ளிவாசல், கோயில்,தேவாலயம்,மற்றும் முறையே,பஸ் ஸ்டாண்ட், பஞ்சாயத்து போர்ட், ஆர‌ம்ப பள்ளிக் கூடம்,மருத்துவ மணை, காவல் நிலையம், உயர் கல்வி கூடங்கள், அரசாங்க சம்ப‌ந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், மிக அருகில் ரயில்வே நிலையம், இன்னும் பல அத்தியாவசிய தேவைக்கான பொது ஸ்தாபன‌ங்கள் இருந்தால், ஊர் வளர்ச்சிக்கேற்ப பேரூராட்சியோ, நகராட்சியாகவோ விள‌ங்கும்..

நம் ஊர் மக்களின் விகிதாசாரப்படி, அவரவர்கள் தேவைக்கு ஏற்ப பள்ளிவாயல்கள், கோயில்கள், சர்ச்சுகள், குளங்கள், ஊரணிகள் உருவாக்கப் பட்டு இருக்கின்றன.

ஆனால் மற்ற சில‌ முக்கிய ஸ்தாபன‌ங்கள் யாரால் இளையான்குடியில் உருவாக்கப்பட்டது என்று இன்றைய இளைய சமுதாயத்திற்கு எந்தளவுக்கு தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி???

இப்படி சில வரலாற்று உண்மைகள் மறக்கப்படுகின்ற‌ன! மறைக்கப்படுகின்றன! மறுக்கப்படுகின்றன! ஏன்? ஏன்? ஏன்?

நமதூரில்,இவர்களெல்லாம் எந்தவித பதவிக்கோ, பணத்துக்கோ, படோடோப‌த்துக்கோ ஆசைப்ப‌ட்டதாக தெரியவில்லை.

இன்றோ; அய்யகோ, என்னவென்று சொல்வதப்பா???


இளையான்குடிக்கென்று, நமது பக்கத்து ஊரைச் சார்ந்த ஒரு மிகப் பெரிய‌ செல்வந்தர் செய்த செயல்கள், காரிய்ங்கள், தான‌ங்கள், தர்மங்கள் இவைகளை செய்தவர் யார்? யார் அந்த சீமான்?? யார் அந்த புண்ணியவான்???


எத்தனை பேருக்குத் தெரியும்!பதில் சொல்வார்களா?!



:முதல் வெளிச்சம். ஆரம்பம்:


இன்று நமதூரில் இயங்கும் பஸ் ஸ்டாண்ட்,பஞ்சாயத்து போர்டு,பக்கத்தில் முன் இருந்த ஊரணி( ஆரம்ப) பள்ளிக்கூடம், ஆண்கள் ஆஸ்பத்திரி, இவைகளுக்கெல்லாம் முன்னால் இருக்கும் சுமார் 80 அடி ரோடு உள்பட, உள்ள தன்னுடைய சொந்த நிலத்தை தான‌மாக கொடுத்தும்;


அன்றைய‌ இளை.உயர் நிலைப்பள்ளி ஆரம்பிக்க முன்ணோடியாக‌, ரொக்கமாக ரூ 10,000/=(ஒப்படையார் குடும்பம் அளித்த தொகைக்கு இணையாக)மும், பள்ளி வளாகத்திற்குள்ளே ஆசிரியர்கள் குடியிருக்க தனித்தனியே 4 வீடுகள் கட்டிக் கொடுத்தும்;


நமது ஊருக்காக, ரயில்வே தொடர்பு வேண்டும் என்று மிக தாராள மன‌துடன்,அவருககு சொந்தமான, பரமக்குடியில் தற்சமயம் ரயில் நிலையம் இயங்கும் இடத்தில் அதிகமான பரப்பளவு கொண்ட இடத்தை தானமாக வழங்கியுள்ளார்:

அவரைப் பற்றி இன்னும் எமக்கு தெரிந்தவை:

ஆங்கிலேயர் காலத்தில் நீதி மன்றங்களில் 'ஜூரி' ஆக அங்கம் வகித்தவர்.

பர்மாவில் மிகப் பெரிய வணிகர்களில் ஒருவர்.

பெருந்தலைவர் காமராஜுடன் நன்கு அறிமுகமானவர்.

நமதூரில் முதலில் 'செவர்லே' 'டாட்ஜ்' போன்ற‌ ஆடம்பர கார்கள் உபயோகித்தவர்.

இவர்தான் நமதூர் முதல் ப‌ஞ்சாயத்து போர்டு ' சேர்மன்'

ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பல கிராமங்கள் சொத்தை இழந்தவர்.

இவருடைய தந்தை 'கான்பகதூர் ' பட்டம் பெற்றவர்.

இவரும் "கான்சாகிப் " பட்டம் பெற்றவர்.



இன்னும் பல இவரைப் பற்றி, எங்களுக்கு தெரியாதவை யாருக்கேனும் தெரிந்திருந்தால் எங்களுக்கு எழுதவும்.. நிச்சயமாக பதிவு செய்வோம்..

இவரைப்போல் இல்லாவிட்டாலும்,இவருக்கு அடுத்தபடியாக உள்ளோரையும், நம் ஊரில் ஒரு சில புண்ணிய‌வான்களால் மறைக்கப்படுகிறார்கள். அவர்களும் இந்த இணையதளத்தில் < வெளிச்சத்துக்கு > கொண்டு வரப்படுவார்கள். நிச்சயமாக. ஆமீன்.

இப்பொழுதாவது புதிருக்கான விடை தெறிகிறதா?

இவர் நினைத்து இருந்தால் பஞ்சாயத்து போர்டை இவருடைய ஊரிலேயே வைத்திருக்க முடியும்...


இன்னும் இவரைப்ப்ற்றி அறிந்தும்,அறியாது போன்றும், தெரிந்தும்,தெரியாது போலவும் இருப்பவர்களைப்பற்றி நாம் கவலைப்பட போவதில்லை...


இவர் எந்த ஊர்? என்ன பெயர்??


புதூரைச்சார்ந்த,கான்பகதூர் .ச.அ. நயினா முஹமது ராவுத்தர் அவர்களின் மகனாகிய. சண்டி கான்சாகிப் . ச.அ. ந.முஹமது ராவுத்தர் அவர்களே *********


"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்"
"இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"




இணைய தள நிர்வாகம்

Home

7 comments:

Anonymous April 10, 2009 at 4:44 PM  

சண்டி முஹமது ராவுத்தர் அவர்களை ப்ற்றி நினைவு கூர்ந்ததற்கு நண்றி

இவர்கள் மவுத் ஆன்வுடன் இவருடைய ஜனாஸா சந்தனப்பெட்டியில் வைத்து

அடக்கம் செய்யப்பட்டது..புதூர் வாசி

Anonymous April 21, 2009 at 4:10 AM  

சமுதாய நலனில் அக்கறை கொண்டு தஙகள் பெரும் உழைப்பாலும்,பொருள்
உதவீயாலும் கல்வி நிருவனங்களை உருவாககிய மறைந்த சமுதாய நல ஆர்வலர்கள் மர்ஹும் கான்சாஹிப் சண்டி ச.அ.ந.முஹம்மது ராவுத்தர்,
வாஞ்ஜுர் பீர்ம்ஹம்மது கலிஃபா k.m. நைனாமுஹம்மது மற்றும் சான்றோர் பலர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது.
நேற்றய விதைகள் இன்றைய மரங்கள்
விதைத்தவனை உழைத்தவனை கிளைகள் மறக்கலாம்
ஆனால் வேர்கள் மறக்காது
மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டது
நம் சமுதாயத்திற்க்காக பாடுபட்டவர்களை
கண்ணியப்படுத்துங்கள.அதனால் உஙகள் கண்ணியம் குறைந்து விடாது.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளருஙகள்.
உங்கள் பிள்ளை தானே வளரும்.


இந்த இணயதளம் ஆக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
வளருட்டும் உஙக‌ள் பணி.
சிந்தா அப்துல்லாஹ்
சவூதி அரேபியா
21-04-2009

Anonymous April 21, 2009 at 4:12 AM  

சமுதாய நலனில் அக்கறை கொண்டு தஙகள் பெரும் உழைப்பாலும்,பொருள்
உதவீயாலும் கல்வி நிருவனங்களை உருவாககிய மறைந்த சமுதாய நல ஆர்வலர்கள் மர்ஹும் கான்சாஹிப் சண்டி ச.அ.ந.முஹம்மது ராவுத்தர்,
வாஞ்ஜுர் பீர்ம்ஹம்மது கலிஃபா k.m. நைனாமுஹம்மது மற்றும் சான்றோர் பலர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது.
நேற்றய விதைகள் இன்றைய மரங்கள்
விதைத்தவனை உழைத்தவனை கிளைகள் மறக்கலாம்
ஆனால் வேர்கள் மறக்காது
மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டது
நம் சமுதாயத்திற்க்காக பாடுபட்டவர்களை
கண்ணியப்படுத்துங்கள.அதனால் உஙகள் கண்ணியம் குறைந்து விடாது.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளருஙகள்.
உங்கள் பிள்ளை தானே வளரும்.


இந்த இணயதளம் ஆக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
வளருட்டும் உஙக‌ள் பணி.
சிந்தா அப்துல்லாஹ்
சவூதி அரேபியா
21-04-2009

Anonymous April 21, 2009 at 11:15 AM  

really its a nice job

Anonymous April 21, 2009 at 9:42 PM  

ச்ண்டி கான்சாஹிப் ச.அ.ந.முஹம்மது ராவுத்தர் அவர்கள்
பிறந்த நாள் 17‍‍.03.1888
இறந்த நாள் 27.11.1966
பதிவு
சிந்தா அப்துல்லாஹ்
சவுதி அரேபியா
21.04.2009

மக்கள் விருப்பம் !!! November 1, 2009 at 8:00 AM  

சண்டி கான்சாகிப் . ச.அ. ந.முஹமது ராவுத்தர்.

A great Soul.

abuthahir November 17, 2009 at 6:28 PM  

We expect more details about this kid of people who spent their time and enargy for our place

Thanks for publish

Abuthahir

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP