இது கதையல்ல!கற்பனையல்ல!சர்சைக்கு முற்றுப்புள்ளி:

>> Friday, April 24, 2009

இது கதையல்ல! கற்பனையல்ல! சர்சைக்கு முற்றுப்புள்ளி:


இன்று நடப்பதென்ன???


ஆனால் அன்று நடந்ததென்ன? விளக்கம் கேட்டோம், பதில் வெறுப்பாக வந்தது!


மறுபடியும் தொடர்பு கொன்டு அன்பாக விளக்கம் கேட்டோம், பதில் கோபமாக வந்தது..


விட்டோமா? முயற்ச்சியை, "நல்லவர்களின் முயற்சி வீன் போவதில்லை":


எங்கள் கேள்விகளுக்கு பதில்,அருவியாக அள்ளித் தெளித்தது...


அப்படி பெறப்பட்ட பதிலை அப்படியே தருகிறோம்.. நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்?


யாரிடம்?


"1970 ல் தங்கள் தகப்பனார் காலேஜ் கட்டி கொடுத்த விபர‌ங்களை, நீங்கள் ஊரிலேயே இருந்ததினால் கண்டிப்பாக, உண்மையான நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.அந்த விபரங்களை எங்கள் இணையதளத்திற்கு கூறுவீர்களா??‍.. இது கேள்வி...

யாரிடம்???


மர்ஹூம் ஹாஜி.வி.எம். பீர்முஹமதுவின் இளைய மகனிடம்;


அவரின் பதில் இதோ;


" நான் விபரமறிந்து நாட்களில் நான் பார்த்தது, அனேகமாக 1968.69ல் இருவர் காமராஜர் ரோட்டில், ஒருவர் தன்னுடைய கழுத்தில் 'பறை' என்ற மோளத்தை அடித்துக்கொன்டும், மற்றவர் ஒரு போஸ்டர் அடித்த தள்ளு வண்டியைத் தள்ளிக் கொன்டும், நமதூருக்கு கல்லூரி வருகிறது, நன்கொடையினைத் தாருங்கள், என்று சத்தமிட்டும் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறேன்.



அவர்கள் இருவர், ஜனாப்.ஹவுத் நையினார் அம்பலம், ஜனாப். எம்.எஸ்.அபுதாஹிர் (மொட்டச்சி) ஆவார்கள்.. பின்னாளில் அவர்கள் ஒரு நோட்டீஸை என் தாயாரிடம், எங்கள் வீட்டிற்கு வந்து, கொடுத்து இதை தகப்பனாருக்கு (சிங்கப்பூருக்கு) அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொன்டார்கள்..

1970,மார்ச் மாதம் 15ந்தாம் தேதியில்,என்னுடைய தகப்பனார், தன்னுடைய "புனித ஹஜ்ஜை" நிறைவேற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் சிங்கப்பூரிலிருந்து மெக்கா சென்றதால்,சொந்த ஊர் வந்தவுடன், வீட்டில், ஓர் பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்தவுடன், நன்னா வி.கே.இபுறாஹிம் அலி அம்பலம் அவர்கள், ஹவுத் நயினார், ஓ.ஆர்.இபுறாகிம் அலி, காதர் இபுறாஹிம், எம்.எஸ் அபுதாஹிர். இவர்களெல்லாம் கல்லூரி விசயமாய் பேச, தகப்பனாரும் வாக்கு கொடுத்து விட்டார்.



அதன் படி இன்னும் பல பேருடைய உதவி வேன்டி, என்னுடைய தகப்பனார் ஒரு கார் பிடித்து, அதில் அவரும், ஹவுத் நைனார், ஓ.ஆர்.இபுறாஹிம் அலி, டாக்டர்.ஏ.ஐ.முகம்மது சரீப், எம்.எஸ்.முஹமது உசேன், ஆகியோர் இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ள‌ ஒரு பெரிய கொடை வள்ளலைப் பார்த்து கல்லூரிக்கு நிதி வேண்ட, அவர்களோ, நிதி தருவதாகவும், கல்லூரிக்கு அவர்கள் குறிப்பிட்ட பெயரை வைக்க வேன்டியும், கேட்டுக் கொள்கின்றனர்.. இதை யோசித்து இக் குழு மனம் குழம்ப,


என்னுடைய தகப்பனார்,'"நைனாரெ, ரொம்ப யோசிக்காதீங்க, நானாச்சு, கல்லூரிக்கழக விருப்பப்படி குறித்த நேரத்தில் காலேஜ் திறந்துடுவோம்"
என்று தைரியம் கூற,


ஊர் வந்தவுடன் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு, காலேஜுக்கு உங்களுடையெ பெய‌ரையே வைத்து விடலாம் என்றதும், இவர் மறுக்க, டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி என்றே, முதல் முடிவே இறுதியாகிறது..





எங்கள் தகப்பனார் கட்டிட வரைபடப்படி, முதன் முதல் கட்டிடத்தை தானே நின்று கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று, அதற்குன்டான் வேலையை தொடங்கிவிட்டார்,


இக் கல்லுரி முகப்பு இடம், பரமக்குடி ரோட்டில் முகப்பு வாயில் வர வேண்டும் என்பதற்காக 19/04/70 ல் ஜனாப் அபுதாஹிரிடம், 2 ஏக்,78 செண்டு இடம் கிரையம் வாங்கி, மறு நாளே, 20/04/70 அன்று கல்லூரிக்கழகத்திற்கு (இளை சப் ரி.எண் 472/70) இனாமாக ரிஜிஸ்தர் செய்து கொடுத்ததினால்,





28/04/1970 அன்று நம் கவர்னர் மேதகு உஜ்ஜல் சிங் அவர்களால், அந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது..



அதற்குப்பின் கட்டிட வேலைகள் மிக விறு விறுப்பாக, நடக்க,
எங்களுடைய பண்னையில், (அரியாண்டிபுர கிராம ஆட்கள்) வேலை செய்த அணைவரும் இக்கட்டிடத்துக்காக உழைத்தார்கள்
.
தினமும் என் தகப்பனார் கட்டிட இடத்திற்கு தன்னுடைய மாட்டு வண்டியில் செல்வார், இதைப் பார்த்து ஜனாப். அமீன் நயினார் ஹ‌வுத் அவர்கள், பரமக்குடி பி.பி.டி பஸ் கம்பெனியிலிருந்து இளையான்குடியிலிருந்து கல்லூரி கட்டிடயிடம் வரை செல்ல"இலவச பஸ் பாஸ்" வாங்கி வந்து கொடுத்தார்கள்.



ஆனால், இலவசம் விரும்பாததினால் தன்னுடைய 55 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொன்டு(அரியாண்டிபுர தோப்பில்), கற்றபின் சைக்கிளில் சென்று கட்டிட வேலைகளை கவனித்தார். ஜனாப் அமீன் நைனார் அவர்களும் தினமும் கட்டிட இடத்திற்கு சென்று கவனித்து வருவார்கள்.



இச் சமயத்தில் என்னுடைய ச‌கோதரர் ஒருவரும், ஊரில் இருந்ததால் அவரும் இவ்விசயத்தில் உதவியாக இருந்தார். கட்டிடம் முழுமை பெறும் போது, மேற்கூரை சிமென்ட் சீட் போடும் பொழுது (இவ் வேலையை திரு.மைக்கேல் ஆசாரி அவர்கள் செய்தார்)


முடியும் தருவாயில்,ஒரு இரவில் பயங்கரமான சூரைக்காற்று வீசியதால் கூரை சரிந்து விழ, உடணே அரியாண்டிபுரத்திலிருந்து 100 பேருக்கு மேல் அழைத்து வந்து சரி உடனடியாக‌ செய்தது நான் கண்னால் பார்த்த விசயம்.

திட்டமிட்டபடி எல்லா வேலைகளையும் சிறப்புற செய்து முடித்து,



மே 1970ல் தகப்பனார் கரஸ்பான்டென்ட் ஆகவும் கல்லூரிக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, என் தகப்பனாரால் ஆசிரியர்கள், அலுவல்கஸ்தர்கள், சிப்பந்திகள் ஆகியேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போடப்படுகிறது.
ஜுலை 1,1970 ல் கல்லூரி தொடக்கம்

ஜூலை 5 1970ல்,அதிகாரப்பூர்வமான, நீங்கள் பார்த்த அழைப்பிதழில் கண்டபடி , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆரம்பம்.

கண்ணியமிகு காயிதே மில்லத்
அவர்கள், அன்று காலையிலே ஊர் வந்து. ஜனாப்.பி.என்.ஐ . அபுதாலிப் அவர்கள் வீட்டில் தங்கி, அன்று மதியம் எங்கள் வீட்டில் அவருக்கும்,ம‌ற்றைய பெரியோர்களுக்கும், விருந்து நடந்தது.அது ஒரு மற‌க்கமுடியாத நிகழ்ச்சி..

அன்று மாலை 4 மணிக்கு மேல் விழா ஆரம்பித்து, மேடை நிறைந்து காணப்பட்டது. அந்த மேடையில் முன்னால் ஒரு மூலையில் என் சகோதரரும் ,நானும்(அச்சமயம் நான், இ.உ.பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறேன்) அமர்ந்து விழாவில் பேசிய அத்தனை பேருடைய பேச்சுக்களையும், டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்தோம்.


அந்த நிகழ்ச்சியின் பதிவுகள் இன்றும் நாங்கள், திரும்ப, திரும்ப கேட்டு ரசிக்க முடிகிறது.


மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களின் கோர்வையான, அடுக்கு மொழி பேச்சிலோ" நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம், ஊருக்கு ஊர் ஒர் பீர் முஹமது வேண்டும்" என்பதும்,

ஜனாப்.அமீன் நைனார் ஹவுத் அவர்கள் இயற்கையான,சாதாரன பேச்சு நடையில், பேச்சு முழுக்க என் தகப்பனாருடைய உழைப்பைப்பற்றி, வெளிப்படையான பேச்சு தான், சுவரசியமானது ஆகும்..


அதுமுதல் கல்லூரி நல்லதொரு பீடு நடை போட்டு வந்தது, 14/08/1970ல் கல்லூரி பொதுகுழு கூட்டத்தில் ஒரு சில மெம்பர்கள் நடந்து கொண்ட விதம்,என் தகப்பனார் மனதைப் புன்படுத்தி, ஜனாப்.அமீன் நைனார் ஹவுத அவர்கள் என்னுடைய தக‌ப்பனாரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், முடியாமல் 25/08/190 ல் தன்னுடய கரஸ்பான்டென்ட் பத‌வியை ராஜினாமா செய்தார்க‌ள்..

இச் சம்பவத்தை உருவாக்கிய "ஒட்டுண்ணிகளையும்" "சாருண்ணிகளையும்" நாங்கள் அறிவோம்..

இக் கல்லூரி உருவாக்க, என்னுடைய தகப்பனாருக்கு உறுதுனையாய் நின்ற மர்ஹூம்.ஜனாப். அமீன் நெயினார் ஹவுத் அம்பலம் அவர்களுக்கு என்னுடைய‌ இத‌ய பூர்வமான நன்றி.. இவர்,(அமீன் நெயினார் ஹ‌வுத்) இதைத் தவிர, எனக்குத் தெரிந்த, நம் ஊருக்கு, செய்த நல்லவைகளை, பிற‌கு தெரிவிக்கிறேன்..


இவையாவும் நம் ஊரில்,அப்பொழுது இருந்த, இப்பவும் இருக்கின்ற நிறைய பேர் மிக,மிக நன்றாக அறிவார்கள்.. ஆனால் அதில் சிலர் வாய்மூடி மவுனியாகி விட்டார்கள்.. என்ன காரனமோ?!



"யாம் அறியேன் பராபரமே".

என்னுடைய தகப்பனாருக்குப்பின், எங்கள் குடும்பத்திலிருந்து யாருமே கல்லூரி கழகத்தில் அங்கத்தினர் கூட இல்லை.. இதில் பலருக்கு திருப்தி..

**************************


எங்கள் இனயதள சார்பில்,தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நண்றி..


நிர்வாகம்

0 comments:

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP