ஏழாம் வெளிச்சம்-அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்:

>> Friday, December 18, 2009


"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" - அறிஞர் அண்ணாதுரை..

இளையான்குடியில் பிறந்து, சட்டத்தின் இருட்டறையில் புகுந்து, விளக்கு(வெளிச்சம்) ஏந்தி
சட்டத்திற்கும், இளையான்குடிக்கும் பெருமை சேர்த்தவர் எவரோ? அவரே
அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்..

இளையான்குடியில், ஆங்கிலேயர் காலத்திலேயே கிராம அதிகாரியாக (ஹெட் மேன்) நியமனம் பெற்று, வளையாத 'ஹெட்மன்' என்று பெயரெடுத்த ஜனாப் கு.சிக்கந்தர் பாட்சா அம்பலம், ஜனாபா சபுர்ஹான் பீவீ ,தம்பதிகளின் மூன்று புதல்வர்களில் 'இளையவராக'
15/07/1930ல் பிறந்தார்.

இளம் வயதில், எல்லோரும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த, ரஹ்மானியா உயர் ஆரம்பப்பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி முடித்து, பின் பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி போர்ட் உயர்நிலைப்பள்ளியில் பயின்று விட்டு, ம‌துரை, அமெரிக்கன் கல்லூரியில் B.A. பட்டப்படிப்பை கற்று, பட்டதாரியாகி, சட்டம் பயில வேண்டி, மெட்றாஸ் சட்டக்கல்லூரியில் B.L. பட்டம் வாங்கி 1956ல் வழக்கறிஞர் ஆகிறார்.

மதுரையில் புகழ் பெற்ற, மூத்த வழக்கறிஞர் திரு M.S..கிருஷ்னஸ்வாமி ஐயங்கார் அவர்களிடம் Apperentice ஆக சேர்ந்து பணியாற்றிவிட்டு, பின் 19/12/57 முதல் 1961 வரை மதுரையில் வக்கீலாக பயிற்ச்சியில் இருந்தார்.

1961 லேயே ,சென்னை வந்து மதிப்பிற்குரிய ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்களிடம் ஜூனியராக தன் திறமையைகாட்டி வந்துள்ளார்கள்.பின் மதிப்பிற்குரிய மேதகு ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்கள் நீதியரசராக வீற்றிருந்து 'நீதி' யை நிலை நிறுத்தி வந்துள்ளார்கள் .இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்தார்கள்

அட்வகேட் அம்பலம் அஹமது அவர்கள்,உயர் நீதி மன்ற‌த்திலும், சார்பு நிலை நீதி மன்றத்திலும். ட்ரிப்யூனலிலும், வழக்காடி நல்லதொரு மூத்த வழக்கறிஞர் என்ற பெயரை நிலை நாட்டினார்கள்..

இவருடைய திறமையின் பயனாக, 1989ல், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி அரசாங்கத்தின், அரசு சார்பு Pleader ஆகவும், பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆகவும் சென்னை உயர் நீதி மன்றத்தில், 4 ஆண்டுகள் பதவி வகித்து வந்தார்கள்

பாண்டிச்சேரியின், Anglo French Textiles Ltd கம்பெனியின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார்.

02/04/2002ல். பாண்டிச்சேரி அரசின் மனித உரிமைக்கமிட்டியின் மெம்பராக‌, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் நியமனம் செய்கிறார்கள். பாண்டிச்சேரி மனித உரிமை கமிட்டியில் .மேதகு நீதியரசர் P. தங்கமனி அவர்கள் (Madras High Court) சேர்மனாகவும், ஜனாப் K.S.அஹமது அவர்களும் ,Sister சேவியர் மேரி அவர்களும் அங்கம் வகித்தனர் .

இவருடைய குடும்பத்தை பற்றி: இவர்களது துனைவியார் பெயர் ஜனாபா. சபியாள் பேகம், இத் தம்பதிகளுக்கு, இரண்டு பெண் மக்களும், இரண்டு ஆண் மக்களும் உள்ளனர்

இவரது மூத்த மகனார், Dr. உஸ்மான் அலி அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளார்.. தற்சமயம் சென்னையை அடுத்த திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் Senior Civil Surgeon ஆகப்பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இளைய மகனார், ஜனாப் அப்துல் ஜலீல் அவர்கள், அரப் அமீரகத்தில் வேலை செய்துவிட்டு ,சென்னை வந்து Textile தொழிலில் ஈடுபட்டுள்ளார்
.

Advocate K.S.Ahamed.B.A.B.L




இவரைபற்றி பொதுவாக:

அம்பலமா? என்பதை நம்பலாமா? என்பதற்கேற்ப, யாரையும் இவர் சீண்டியதும் ,தீண்டியதும் இல்லை..

சினமும், சீறுவதும் நீதி மன்றத்தில் வழக்காடும் போதுதான்..

மனித நேயம், பிறர் கேட்காமல் செய்யும் உதவிகள், பல ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளைச்செய்தல்..

இவரிடம் "Case" கட்டுகள் அதிகமாக இருந்தாலும், "Cash" கட்டுகள் அதிகம் பெற்றதில்லை..

எந்தவொரு வழக்கும், தன் மனதுக்கு நியாயமாக பட்டால் மட்டுமே, வாதாடுவார்கள்..

ALIM Engineering College க்கு ஸ்தாபக சட்ட ஆலோசகராக இருந்துள்ளார்கள்..

இவரிடம் ஜூனியராக பணியாற்றியவர்கள், இன்று உயர் நீதி மன்றத்தில் நல்ல புகழோடு வாதிடுகிறார்கள்..

இவர்கள் நிச்சயமாக "நீதிபதி" ஆகியிருக்க வேண்டும்..ஆனால்?!

2007 ம் வருடம் நவம்பர் மாதம் 21ந்தேதி சென்னையில் வபாத் ஆனார்கள்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..


தகவல்கள் வழங்கியவர் K.S.A. அப்துல் ஜலீல் அவர்கள்..

நிர்வாகம்

Home

Read more...

தென்மலைக் "கான்" காதர் சாஹிப் ஹமீது சுல்த்தான்

>> Wednesday, July 22, 2009

இளையான்குடி வரலாற்றில், திருநெல்வேலி மாவட்டம், தென்மலை என்ற ஊரில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் "தென்மலைக்கான் வகையறா" என்று அழைக்கப்படுவதாக நாம் அறிகிறோம்.

நமதூரில் தென்மலைக்கான் என்றதுமே நினைவுக்கு வருபவர்கள் மர்ஹூம். அல்ஹாஜ் T.K.H. அவர்களே! ஏனெனில் அவர்கள் செய்த நற் செயல்களின் பலனாக..

ஹாஜி காதர் சாஹிப் அவர்களுக்கும், ஜனாபா பொன்னம்மாள் பீவீ அவர்களுக்கும் 1909 ம் ஆண்டு மே மாதம் இளைய மகனாகப்பிறந்தார்கள்.

ஹாஜி.அப்துல் மஹ்மூத் அவர்கள், ஹாஜியானி ஜெமிலா பீவீ அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

இவருடைய துனைவியர் பெயர் ஹாஜியானி மரியம் பீவீ ஆவார்கள்.

இத் தம்பதிகளுக்கு 3 பெண் மக்களும் (ஜனாபா. ஷெரிஃபா பீவீ, ஜனபா ஃபைரோஸா பீவீ, ஜனாபா சமீம் ஷிரா) 3 ஆண் மக்களும்(டாக்டர்.முஹமது ஃபிர்தவ்ஸ், ஜனாப்.முஹமது ஃபாரூக், ஜனாப் முஹமது ஃபரிஸ்டா) உள்ளார்கள்

T.K.H. அவர்களின் 8 வது வயதிலேயே தன்னுடைய தாயாரை இழந்து, சகோதரி ஜெமிலா பீவீயாலும். தகப்பனார் காதர் சாஹிப் அவர்களாலும் பிரியமிகு பிள்ளையாக வளர்ந்து வரும் வேலையில், தன்னுடைய 10வது வயதில், தகப்பனாருடன் பினாங்(மலேயா) சென்று, கல்வி கற்று, அங்குள்ள ஸ்கூல் உயர் படிப்பான 'கேம்ப்ரிட்ஜ்' O 'லெவெல் படிப்பை 1925 ல் நிறைவு செய்தார்கள். தன்னுடைய 16 வது வயதில், தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் முதல் முயற்சியாக, பினாங்கிலேயே, ஹாஜி K.M..சுல்த்தான் அலாவுதீன் அன்ட் சன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி ,கப்பலில் சரக்கு ஏற்றி, இறக்கும் கம்பெனியில் வேலையில் சேர்ந்து, படிப்ப‌டியாக, முன்னேற்றப்பாதையில், சிறிதும் சறுக்காமல், நல்லதொரு வளர்ச்சியினை அடைகின்ற வேளையில்...

இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய இரானுவம், மலேயாவை கைப்பற்றியதனால், ரானுவம் எல்லா வியாபாரத்தலங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததின் காரணமாக, எல்லா வியாபாரிகளும் ஆதிக்க சக்திக்கு பயந்து, காடுகளில் ஒளிந்து .மறைவு வாழ்க்கையில் ஈடுபட்டது போல், T.K.H அவர்களும் இதே நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

போருக்குப்பின், பினாங்கில் T.K.H. அவர்கள் துணிந்து தன்னுடைய வியாபாரகளத்தில், உணவுப்பொருட்கள், மருந்து வகைகள் வியாபாரத்தில் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்..

பின் வரும் நாட்களில். தன்னுடைய வியாபாரத்தை, மலேயாவிலிருந்து, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து கராச்சியிலும், சிட்டஹாங்கிலும், தன்னுடைய வியாபாரத்தை நிலை நிறுத்தியும், சீறும் சிறப்புடனும், 1971 வரை வெற்றிகரமாக நடந்து வரும் வேளையில், இந்திய‍ பாகிஸ்தான் போரினால்.வியாபாரம் நடத்த முடியாமல், பாகிஸ்தானில் வியாபாரத்தை மூடி விட்டு சென்னை திரும்பினார்.

இவருடைய வாழ்க்கையில் 2 பெரிய போர்கள் விளையாடி இருக்கின்றன.. எல்லாம் நன்மைக்கே.. அல்லாவின் கருணையினால்..

சென்னையில் 1973ம் ஆண்டு, புதிய மகாபலிபுரம் ரோட்டில் (VGP அருகில்) ஹம்மா(HAMMA) ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஆரம்பித்து, கட்டுமான வேலைக்குண்டான ஸ்டீல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தும், இதன் மூலம் பல ஆட்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும், வியாபாரமும், பொது நற்காரியங்களும் செய்து வரும் வேளையில்....

1999ம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ம் தேதி, தன்னுடைய 90 வது வயதில் வபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)






ஒரு மனிதன், உலகத்தின் எல்லா மூலை, முடுக்குகளில் சுற்றி வந்து வியாபாரம் செய்திருந்தாலும், தான் பிறந்த மண்னையும், தன்னை உருவாக்கிய தந்தையையும் எவ்வளவு நேசித்திருப்பார்கள் என்பதற்கு சான்றாக, T.K.H. அவர்களின் எண்ண‌மும், ஆசையுமாகவும், இதயத்தின் உறுதியும் தான், அவர் வபாத் ஆனவுடன், தான் பிறந்த மண்ணிலேயும், தன் 10 வயதில், எப்படி இவ்வுலக வாழ்க்கைக்கு வழிகாட்டிய‌ தன் தக‌ப்பனாருடன் சென்றாரோ, அதுபோல் அவரது 90வது வயதிலும், தகப்பனாருடைய கபர்ஸ்தான் பக்கத்திலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்ற "ஹாஜத்தை" அவருடைய பிள்ளைகள் நிறைவேற்றிணார்கள்....

இவருடய நற்காரியங்களில் சிலவற்றின் தொகுப்பு:

1) இளையான்குடியில் "THENMALAIKHAN EDUCATIONAL TRUST' உருவாக்கியது.

2) இளையான்குடியில் பெண்களுக்காக ஒரு தனி உயர் நிலைப்பள்ளி உருவாக்கியதில் ஒருவரும், இப்பள்ளிக்காக, தன்னுடைய தாயார் நினைவாக‌ "பொன்னம்மாள் காதர் சாஹிப் பெண்கள் உயர் நிலைப்பள்ளி'" என்ற பெயரில் ஒரு கட்டிடத்தைக்கட்டி கொடுத்தவரும் இவரே!

3) சென்னையில் 'UNITED ECONOMIC FORUM' நிறுவன உறுப்பினராக இருந்துள்ளார்கள்.

4) இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில், "இஸ்லாமிய கலை களஞ்சியம்" என்ற கட்டிட வளாகத்தை கட்டி அர்ப்பனித்துள்ளார்கள்.

5)இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் "காதிரியா மஸ்ஜித்" உருவாக்கிய பெருமையும் இவரைச்சாரும்.

6)இளையான்குடி, INPT ஜமாத்துக்காக சிங்காரத்தோப்பில் ஜூம்மா பள்ளி நிறுவியவரும் இவரே.

7) சிவகெங்கை இளையான்குடி ரோட்டில், சாத்தரசன்கோட்டை என்ற ஊரில் "காதிரியா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.

8)சிவகெங்கை மாவட்டம் காளையார் கோவிலில்,"முஹமதிய மஸ்ஜித்" உருவாக்கி வக்ப் செய்துள்ளார்கள்

9) பரமக்குடியில், பாரதி நகரில் "ஜும்மா மஸ்ஜித்" கட்டி வக்ப் செய்தார்கள்.



இவரிடம், நாங்கள் அதிசயித்த விசயம் இவருடைய எளிமை. பந்தா, பகட்டு என்று ஏதும் அறியாதவர். INPT பள்ளிக்கு அன்றையகால கட்டத்தில், ந‌டந்த‌ சில முக்கியமான நிகழ்வுகளுக்கு, இவருடைய பங்கு போற்றதக்க‌தாகும்.

இன்று இவர்கள் நம்முடன் இல்லை, ஆனால் இவர் உருவாக்கி விட்ட கல்வி, மற்றும் இஸ்லாமிய ஸ்தாபனங்கள், பள்ளிகள் இவருடைய பெயரையும், புகழையும் அழியா வண்ணம், எப்படி "பூ வாடி விட்டாலும் அதனுடைய வாசனையை முகர்ந்தவர்கள் மறக்க மாட்டார்களோ" அதைப்போல், இளையான்குடி மக்களும் TKH எனும் மலரை மற‌க்க மாட்டார்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன்....

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் TKH அவர்களின் இளையமகனார் ஜனாப். முஹமது ஃபரிஸ்டா அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி)

ஜனபா யாஸ்மின் அவர்களின் "கமென்ட்ஸ்" படி இந்த வாக்கியம் நீக்கப்படுகிறது. வாசகருக்கு நன்றி

WEBADMIN HOME

Read more...

ஐந்தாம் வெளிச்சம் : "வள்ளல் பெருந்தகை" அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

>> Saturday, June 20, 2009


இளையான்குடி, புதூரில் ஆலிஜனாப். கட்டச்சி. குப்பை ராவுத்தர் அவர்கட்கும், ஜனாபா மைமூன் பீவிக்கும், மகனாக 1910ல் பிறந்தார்கள்.

புதூரிலேயே, தமிழ்க்கல்வியைப்பயின்றார்கள், இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று அதிகம் கொண்டு, தமிழ் சொற்பொழிவு ஆற்றுபவர்களிடம் நெருங்கி பழகி, தமிழ்ப்புலமை மீது அளவில்லா ஆர்வம் காட்டி வந்தார்கள்.

1921ல் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார், அங்கு போய் ஆரம்பத்தில் ஒரு கடையில் சிப்பந்தியாக பணியாற்றி, நேர்மை, சலியாத உழைப்பு, செம்மையான ஊக்கம், வியாபார யுக்தி, இவற்றை மூலதன‌மாகக்கொண்டு, பல்துறை வர்த்தகத்தின் உரிமையாளராக விளங்கினார்.

இவருக்கு, மலேசியா, தைபிங் நகரில் 'பேராஹ் முஸ்லீம் ரெஸ்டாரென்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே.

மலேசியாவின் பொதுத்துறை, சங்க மன்றங்களில் உறுப்பினராக இருந்து பொதுச்சேவைகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், தைப்பிங்கிள் வெளிவந்த 'உதயசூரியன்' என்ற பத்திரிக்கை நலிவுற்ற நிலைக்கு வந்தவுடன், அதற்கு உதவி செய்ய எண்ணம் கொண்டு, அப்பத்திரிக்கைக்கு புதிதாக 'உதயசூரியன் அச்சகம்' நிறுவ உதவியுள்ளார்கள்.

தைப்பிங்கில், இந்திய விடுதலை போராட்ட ராணுவ நடவடிக்கைக்குழு (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) பொறுப்பினராகவும், தைப்பிங் இந்திய முஸ்லீம் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும், பிறகு ஜனநாயக முறைப்படி தேர்வு பெற்று, தலைவராகவும், உப தலைவராகவும் சமுதாய பணியிலும், இந்திய ஹணபி பள்ளி டிரஸ்டியாகவும், கோலாலம்பூரில் உள்ள "பெடரல் தலைந‌கர் தேசிய நெகரா முஸ்லீம் பள்ளிக்கு" தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளார்கள். தைபிங் இந்து தேவாலய சபா பள்ளி மண்டபத்திற்கும் கணிசமாக உதவியுள்ளார்கள்.

தைபிங் இந்திய அனாதைக்குழந்தைகளின் விடுதிக்கு ஆயுட்கால உறுப்பினராக இருந்து சேவைகளையும், தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

தைப்பிங் மலேசியன் இந்தியர் காங்கிரஸுக்கு தொடக்க கால தலைவராகவும், பின் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவரே என்றால் மிகையாகாது.

1956ம் ஆண்டு தன் புனித 'ஹஜ்ஜை' நிறைவேற்றினார்கள்.


1952ல் இளையான்குடி உயர் நிலைப்பள்ளிக்காக, ஆசிரியர் தங்குவத‌ற்கு ஒரு வீடு ஒன்றை, பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளே கட்டி கொடுத்தார்கள்.

1957ல் புதூரில் இருந்த 'கற் பள்ளிக்கு' இவர்களது தாராள பொருளுதவியால், பள்ளீயின் முக்கியமான மராமத்துகள் செய்யப்பட்டு, அப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

இவருடைய ஆரம்ப நிதி உதவியைக்கொண்டும், டிரஸ்டி போர்டார்களும் முன்னின்று மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் டாங்க் கட்டி வீதிகள் தோறும் பைப் வசதிகள் அமைத்துக்கொடுத்துள்ளனர்.

1959க்குப்பின், இவர்கள் மத்ரஸாவுக்கென நல்லதொரு புதிய தார்சு கட்டிடத்தை கட்டி தந்துள்ளார்கள்

1972 செப் 29ல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி வளாகத்தில் 2வ‌து கட்டிடமாக அல்ஹாஜ் கே.கே.இபுறாகிம் அலி அவர்களின், மறைந்த‌ துனைவியார் நினைவாக 'ம‌ஹ்மூதா பீவி நினைவு கட்டிடத்திற்கு' பல்கலைக்கழக துணை வேந்தர் மு.வரதராஜனார் அவர்கள் தலைமையில் அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அவர்களின் இளைய மகனார் டாக்டர் கே.கே.இ. செளக்கத் அலி அவர்கள் அடிக்கல் நாட்டியும், கட்டிடம் நிறைவு பெற்றவுடன், 1976 ஏப் 30ல், கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அல்ஹாஜ் முனைவர் என்.ஏ. நூர் முஹமது அவர்கள் த‌லைமையில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் தம் துனைவியார் நினைவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இளையான்குடி உயர் நிலைப்பள்ளியில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் நினைவாக, 'இயற்பியல் துறை ஆய்வுக்கூடம்' கட்டிடத்தை கட்டி, அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ. முஹமது அலி அவர்கள் (இவரும் தந்தை வழியிலேயே) பள்ளிக்கு அர்ப்பனிக்கிறார்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தான் பிறந்த மண்ணிலே (புதூரிலே) அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி மேல்நிலைப்பள்ளி 1972ல் உருவானது புதூருக்கும், பக்கத்தில் உள்ள பெறுவாரியான கிராமங்களின் கல்வி வளர்ச்சிக்கும் வித்திட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இன்று இப்பள்ளியினால் மர்ஹூம் அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்களுக்கும், இவர்களால் இப்பள்ளிக்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது

அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்கள்,தைபிங் நகரில் 21‍ 12 1979 அன்று வஃபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)



வள்ளல் பெருந்தகை அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

ஜஸ்டிஸ் ஹாஜி பசிர் அஹ்மது அவர்கள், நேரில் கேட்டுக் கொண்டதன் பேரில்,S.I.E.T. சென்னை. நிர்வாகத்துக்கு ஒரு பெரும் தொகையை வழங்கியுள்ளார்கள், இன்றும் அந்த நிர்வாகத்தின்(Justice Basheer Ahmed Sayed College for Women, Chennai-600 018) அலுவலகத்தில், தகவல் போர்டில் ஹாஜி கே கே இபுறாஹீம் அலி அவர்களின் பெயரை எழுதி, கண்ணியப்படுத்தி இருக்கிறார்கள். S.I.E.T. நிர்வாகத்துக்கு நன்றி.

மற்றும் திருச்சி ஜமால் முஹமது கல்லுரிக்கும் கணிசமான தொகையை வழங்கியுள்ளார்கள்

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ.முஹமதலி அவர்களுக்கு, இணையதளத்தின் சார்பாக மணமார்ந்த நன்றி...)


நிர்வாகம் HOME

Read more...

நான்காம் வெளிச்சம்--ஹாஜி வாஞ்சூர் வி.எம். பீர் முஹம்மது.

>> Sunday, May 10, 2009


தெளிவாக பெரிதாக படிக்க‌ படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

































தெளிவாக பெரிதாக படிக்க‌ படத்தின் மேல் கிளிக் செய்யவும்.










Read more...

இது கதையல்ல!கற்பனையல்ல!சர்சைக்கு முற்றுப்புள்ளி:

>> Friday, April 24, 2009

இது கதையல்ல! கற்பனையல்ல! சர்சைக்கு முற்றுப்புள்ளி:


இன்று நடப்பதென்ன???


ஆனால் அன்று நடந்ததென்ன? விளக்கம் கேட்டோம், பதில் வெறுப்பாக வந்தது!


மறுபடியும் தொடர்பு கொன்டு அன்பாக விளக்கம் கேட்டோம், பதில் கோபமாக வந்தது..


விட்டோமா? முயற்ச்சியை, "நல்லவர்களின் முயற்சி வீன் போவதில்லை":


எங்கள் கேள்விகளுக்கு பதில்,அருவியாக அள்ளித் தெளித்தது...


அப்படி பெறப்பட்ட பதிலை அப்படியே தருகிறோம்.. நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்?


யாரிடம்?


"1970 ல் தங்கள் தகப்பனார் காலேஜ் கட்டி கொடுத்த விபர‌ங்களை, நீங்கள் ஊரிலேயே இருந்ததினால் கண்டிப்பாக, உண்மையான நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.அந்த விபரங்களை எங்கள் இணையதளத்திற்கு கூறுவீர்களா??‍.. இது கேள்வி...

யாரிடம்???


மர்ஹூம் ஹாஜி.வி.எம். பீர்முஹமதுவின் இளைய மகனிடம்;


அவரின் பதில் இதோ;


" நான் விபரமறிந்து நாட்களில் நான் பார்த்தது, அனேகமாக 1968.69ல் இருவர் காமராஜர் ரோட்டில், ஒருவர் தன்னுடைய கழுத்தில் 'பறை' என்ற மோளத்தை அடித்துக்கொன்டும், மற்றவர் ஒரு போஸ்டர் அடித்த தள்ளு வண்டியைத் தள்ளிக் கொன்டும், நமதூருக்கு கல்லூரி வருகிறது, நன்கொடையினைத் தாருங்கள், என்று சத்தமிட்டும் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறேன்.



அவர்கள் இருவர், ஜனாப்.ஹவுத் நையினார் அம்பலம், ஜனாப். எம்.எஸ்.அபுதாஹிர் (மொட்டச்சி) ஆவார்கள்.. பின்னாளில் அவர்கள் ஒரு நோட்டீஸை என் தாயாரிடம், எங்கள் வீட்டிற்கு வந்து, கொடுத்து இதை தகப்பனாருக்கு (சிங்கப்பூருக்கு) அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொன்டார்கள்..

1970,மார்ச் மாதம் 15ந்தாம் தேதியில்,என்னுடைய தகப்பனார், தன்னுடைய "புனித ஹஜ்ஜை" நிறைவேற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் சிங்கப்பூரிலிருந்து மெக்கா சென்றதால்,சொந்த ஊர் வந்தவுடன், வீட்டில், ஓர் பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்தவுடன், நன்னா வி.கே.இபுறாஹிம் அலி அம்பலம் அவர்கள், ஹவுத் நயினார், ஓ.ஆர்.இபுறாகிம் அலி, காதர் இபுறாஹிம், எம்.எஸ் அபுதாஹிர். இவர்களெல்லாம் கல்லூரி விசயமாய் பேச, தகப்பனாரும் வாக்கு கொடுத்து விட்டார்.



அதன் படி இன்னும் பல பேருடைய உதவி வேன்டி, என்னுடைய தகப்பனார் ஒரு கார் பிடித்து, அதில் அவரும், ஹவுத் நைனார், ஓ.ஆர்.இபுறாஹிம் அலி, டாக்டர்.ஏ.ஐ.முகம்மது சரீப், எம்.எஸ்.முஹமது உசேன், ஆகியோர் இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ள‌ ஒரு பெரிய கொடை வள்ளலைப் பார்த்து கல்லூரிக்கு நிதி வேண்ட, அவர்களோ, நிதி தருவதாகவும், கல்லூரிக்கு அவர்கள் குறிப்பிட்ட பெயரை வைக்க வேன்டியும், கேட்டுக் கொள்கின்றனர்.. இதை யோசித்து இக் குழு மனம் குழம்ப,


என்னுடைய தகப்பனார்,'"நைனாரெ, ரொம்ப யோசிக்காதீங்க, நானாச்சு, கல்லூரிக்கழக விருப்பப்படி குறித்த நேரத்தில் காலேஜ் திறந்துடுவோம்"
என்று தைரியம் கூற,


ஊர் வந்தவுடன் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு, காலேஜுக்கு உங்களுடையெ பெய‌ரையே வைத்து விடலாம் என்றதும், இவர் மறுக்க, டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி என்றே, முதல் முடிவே இறுதியாகிறது..





எங்கள் தகப்பனார் கட்டிட வரைபடப்படி, முதன் முதல் கட்டிடத்தை தானே நின்று கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று, அதற்குன்டான் வேலையை தொடங்கிவிட்டார்,


இக் கல்லுரி முகப்பு இடம், பரமக்குடி ரோட்டில் முகப்பு வாயில் வர வேண்டும் என்பதற்காக 19/04/70 ல் ஜனாப் அபுதாஹிரிடம், 2 ஏக்,78 செண்டு இடம் கிரையம் வாங்கி, மறு நாளே, 20/04/70 அன்று கல்லூரிக்கழகத்திற்கு (இளை சப் ரி.எண் 472/70) இனாமாக ரிஜிஸ்தர் செய்து கொடுத்ததினால்,





28/04/1970 அன்று நம் கவர்னர் மேதகு உஜ்ஜல் சிங் அவர்களால், அந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது..



அதற்குப்பின் கட்டிட வேலைகள் மிக விறு விறுப்பாக, நடக்க,
எங்களுடைய பண்னையில், (அரியாண்டிபுர கிராம ஆட்கள்) வேலை செய்த அணைவரும் இக்கட்டிடத்துக்காக உழைத்தார்கள்
.
தினமும் என் தகப்பனார் கட்டிட இடத்திற்கு தன்னுடைய மாட்டு வண்டியில் செல்வார், இதைப் பார்த்து ஜனாப். அமீன் நயினார் ஹ‌வுத் அவர்கள், பரமக்குடி பி.பி.டி பஸ் கம்பெனியிலிருந்து இளையான்குடியிலிருந்து கல்லூரி கட்டிடயிடம் வரை செல்ல"இலவச பஸ் பாஸ்" வாங்கி வந்து கொடுத்தார்கள்.



ஆனால், இலவசம் விரும்பாததினால் தன்னுடைய 55 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொன்டு(அரியாண்டிபுர தோப்பில்), கற்றபின் சைக்கிளில் சென்று கட்டிட வேலைகளை கவனித்தார். ஜனாப் அமீன் நைனார் அவர்களும் தினமும் கட்டிட இடத்திற்கு சென்று கவனித்து வருவார்கள்.



இச் சமயத்தில் என்னுடைய ச‌கோதரர் ஒருவரும், ஊரில் இருந்ததால் அவரும் இவ்விசயத்தில் உதவியாக இருந்தார். கட்டிடம் முழுமை பெறும் போது, மேற்கூரை சிமென்ட் சீட் போடும் பொழுது (இவ் வேலையை திரு.மைக்கேல் ஆசாரி அவர்கள் செய்தார்)


முடியும் தருவாயில்,ஒரு இரவில் பயங்கரமான சூரைக்காற்று வீசியதால் கூரை சரிந்து விழ, உடணே அரியாண்டிபுரத்திலிருந்து 100 பேருக்கு மேல் அழைத்து வந்து சரி உடனடியாக‌ செய்தது நான் கண்னால் பார்த்த விசயம்.

திட்டமிட்டபடி எல்லா வேலைகளையும் சிறப்புற செய்து முடித்து,



மே 1970ல் தகப்பனார் கரஸ்பான்டென்ட் ஆகவும் கல்லூரிக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, என் தகப்பனாரால் ஆசிரியர்கள், அலுவல்கஸ்தர்கள், சிப்பந்திகள் ஆகியேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போடப்படுகிறது.
ஜுலை 1,1970 ல் கல்லூரி தொடக்கம்

ஜூலை 5 1970ல்,அதிகாரப்பூர்வமான, நீங்கள் பார்த்த அழைப்பிதழில் கண்டபடி , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆரம்பம்.

கண்ணியமிகு காயிதே மில்லத்
அவர்கள், அன்று காலையிலே ஊர் வந்து. ஜனாப்.பி.என்.ஐ . அபுதாலிப் அவர்கள் வீட்டில் தங்கி, அன்று மதியம் எங்கள் வீட்டில் அவருக்கும்,ம‌ற்றைய பெரியோர்களுக்கும், விருந்து நடந்தது.அது ஒரு மற‌க்கமுடியாத நிகழ்ச்சி..

அன்று மாலை 4 மணிக்கு மேல் விழா ஆரம்பித்து, மேடை நிறைந்து காணப்பட்டது. அந்த மேடையில் முன்னால் ஒரு மூலையில் என் சகோதரரும் ,நானும்(அச்சமயம் நான், இ.உ.பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறேன்) அமர்ந்து விழாவில் பேசிய அத்தனை பேருடைய பேச்சுக்களையும், டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்தோம்.


அந்த நிகழ்ச்சியின் பதிவுகள் இன்றும் நாங்கள், திரும்ப, திரும்ப கேட்டு ரசிக்க முடிகிறது.


மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களின் கோர்வையான, அடுக்கு மொழி பேச்சிலோ" நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம், ஊருக்கு ஊர் ஒர் பீர் முஹமது வேண்டும்" என்பதும்,

ஜனாப்.அமீன் நைனார் ஹவுத் அவர்கள் இயற்கையான,சாதாரன பேச்சு நடையில், பேச்சு முழுக்க என் தகப்பனாருடைய உழைப்பைப்பற்றி, வெளிப்படையான பேச்சு தான், சுவரசியமானது ஆகும்..


அதுமுதல் கல்லூரி நல்லதொரு பீடு நடை போட்டு வந்தது, 14/08/1970ல் கல்லூரி பொதுகுழு கூட்டத்தில் ஒரு சில மெம்பர்கள் நடந்து கொண்ட விதம்,என் தகப்பனார் மனதைப் புன்படுத்தி, ஜனாப்.அமீன் நைனார் ஹவுத அவர்கள் என்னுடைய தக‌ப்பனாரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், முடியாமல் 25/08/190 ல் தன்னுடய கரஸ்பான்டென்ட் பத‌வியை ராஜினாமா செய்தார்க‌ள்..

இச் சம்பவத்தை உருவாக்கிய "ஒட்டுண்ணிகளையும்" "சாருண்ணிகளையும்" நாங்கள் அறிவோம்..

இக் கல்லூரி உருவாக்க, என்னுடைய தகப்பனாருக்கு உறுதுனையாய் நின்ற மர்ஹூம்.ஜனாப். அமீன் நெயினார் ஹவுத் அம்பலம் அவர்களுக்கு என்னுடைய‌ இத‌ய பூர்வமான நன்றி.. இவர்,(அமீன் நெயினார் ஹ‌வுத்) இதைத் தவிர, எனக்குத் தெரிந்த, நம் ஊருக்கு, செய்த நல்லவைகளை, பிற‌கு தெரிவிக்கிறேன்..


இவையாவும் நம் ஊரில்,அப்பொழுது இருந்த, இப்பவும் இருக்கின்ற நிறைய பேர் மிக,மிக நன்றாக அறிவார்கள்.. ஆனால் அதில் சிலர் வாய்மூடி மவுனியாகி விட்டார்கள்.. என்ன காரனமோ?!



"யாம் அறியேன் பராபரமே".

என்னுடைய தகப்பனாருக்குப்பின், எங்கள் குடும்பத்திலிருந்து யாருமே கல்லூரி கழகத்தில் அங்கத்தினர் கூட இல்லை.. இதில் பலருக்கு திருப்தி..

**************************


எங்கள் இனயதள சார்பில்,தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நண்றி..


நிர்வாகம்

Read more...

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART - 3

>> Monday, April 20, 2009


தரித்திரத்தை மறைக்கலாம்
சரித்திரத்தை மறைக்கமுடியுமா???


"சிலர்,ஊசி முனையில், ஒட்டகத்தைக் கூட நுழைய வைத்து விடுவார்கள் தன்னுடைய ஆதாரமில்லாத எழுத்தால், ஆனால், தற்போது 'டைனோசரைய' நுழைய வைக்க முயலுவது!!! விளக்கம் சொல்லியேயே.............; 'முடியல'


நீடுர் இணைய தளத்திற்கும், புதுக்குளத்தான் அவர்களுக்கும், இளை. சிட்டிசனுக்கும், மற்றும் பழைய கல்லூரி மாணவருக்கும் இந்த, கீழ்க்கண்ட ஆதாரங்கள் பதிலாக அமையும்.


இதற்கான விபரங்களை வாஞ்ஜூர் பீர் முஹமது குடும்பத்தாரய விளக்கம் கேட்டால் என்ன? என்று எங்களுக்கு தோன்றியது. அதனால் அவர்களுடையெ மகனார்கள் 3 பேருக்கு மெயில் அனுப்பி கேட்டதில், எங்களை மதித்து, அவருடைய மகனார் ஒருவர், இந்த விபரங்களை மட்டும் அனுப்பினார், மேலும் நமக்கு எந்த விசயமாய், நாம் விளக்கம் கேட்கிறோமோ,
அதன் சம்பந்தமான விபரங்களை நமக்கு அளிக்க, அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்


டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது"



"I too read a copy of the so called ,"The History of Illayangudi" by one Capt.Amir Ali and two others.The contents come across as self-glorification of an individual with vested interest"
(சொல்லுறதை சொல்லிட்டோம்.. புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க;)
"இதற்கான விளக்கம் கீழே"


Mr.N.A. Ameer Ali appointed as Pricipal by Correspondent of Dr.ZHC. ( Dr ZHC Correspondent letter to DCE Madras)

Dr.ZHC Correspondent letter to Registrar University of Madurai


















அன்று நடந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரித் தொடக்க விழாவில்,கல்லூரின் கரஸ்பான்டென்ட் ஹாஜி வி எம் பீர்முகம்மது ஆற்றிய வரவேற்புரை:‍= (ஆடியோ ரிக்கார்டிங்கிலிருந்து )

அஸ்ஸலமு அலைக்கும்..
அவைத்தலைவர் அவர்களே! மான்புமிகு அமைச்சர் அவர்களே! கல்லூரியை வாழ்த்த வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! பெரியோர்களே! ஆசிரியர்களே! நன்பர்களே! உங்கள் அணைவருக்கும் என்னுடையெ அன்பு கலந்த வணக்கம்.

அயராது பாடுபட்டு கட்டி முடித்த கல்லூரியின் தொடக்க நாள் இன்று நமது உள்ளங்கள் மகிழ்ச்சியினால் குதுகளிக்கும் நாள். இந்த விழாவிற்கு கண்ணியத்தின் காவலராம் காயிதேமில்லத் அல்ஹாஜ்.முஹமது இஸ்மாயில் சாஹிப். எம்.பி அவர்கள் தலைமை தாங்க இண்ங்கி சிறப்பு செய்திருப்பதால் எங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்கிற்து. அவர்களை கல்லூரிக்கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்கின்றேன்,

உயர் கல்வியை இவ்வட்டார மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் இக்கல்லூரி கல்வி அமைச்சர் அவர்களால் திற்க்கப்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.


மாண்புமிகு அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இங்கு வந்து சிற்ப்பு செய்து இருப்பது எங்களது உள்ளத்தில் தேன் பாய்ச்சி உள்ளது நாவலர் அவர்களை இளையான்குடி கல்லூரியின் சார்பில் நெஞ்சார வருக வருக வரவேற்கின்றென்.

நமது கல்லூரிக்கு வாழ்த்து வழங்க வந்திருக்கும் மதுரை பல் கலைக்கழக ரிஜிஸ்தரர் திரு பெருமாள் அவர்களையும், வழக்கறிஞர் திரு பழனி வேல் ராஜன் அவர்களையும், நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு வி. மலைக்கண்னன் அவர்களையும் வருக வருக என்று மனமுவந்து வர வேற்கின்றேன்.

இக் கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்த உள்ளங்களையும்,கூடியுள்ள பெரியோர்களையும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வருக வருக என்று
ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழக சார்பில் வரவேற்கின்றேன்.....


நிர்வாகிகள்
****************************

Read more...

மூன்றாம் வெளிச்சம்.

>> Friday, April 17, 2009

முதல்வெளிச்சத்திலும், இரண்டாம் வெளிச்சத்திலும் வெளியாகி உள்ள கணவான்கள் இருவருக்கும் பல பின்னணி,சொந்தங்கள்,பந்தங்கள் உடன் பிற‌ப்புகள்,முன்னோர்களின் ஆஸ்தி ஆகிய பக்க பலங்களைக்கொண்டவர்கள்..

இளையான்குடியில் நெருங்கிய சொந்தங்களின் ஆதரவு இல்லாமல்,ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிறக்கும் முன்னே தகப்பனை இழந்து,இரு சகோதரிகளுடன்,சொல்லமுடியாத வறுமையுடன்,படிக்க எவ்வித வசதியில்லாமலும் தன் குடும்பத்தை முன்னேற்ற எண்ணி தன்னந்தனியே கடும் உழைப்புடன் போராடி,ஆளும் வள‌ர்ந்து, அறிவும் வளர்ந்து, அதுதாண்டா வள‌ர்த்தி, என்பதற்கேற்ப, பின்னாளில் நல்லதொரு "வெளிச்சத்திற்கு" வந்தவர் இவர்

இதைத்தான் 'சிங்கம் சிங்கிளாக வரும்' என்று தற்சமயம் விளிம்புகிறார்கள்..

இனி இவரால் ஊருக்கு என்ன நன்மை?

இவருக்கு ஊர் என்ன செய்தது என்பதை விட

இவர் ஊருக்கு என்ன செய்தார்? என்பது தானே முக்கியம்!


'தனக்குப்பிறகுதான் தான‌மும்,த‌ர்மமும்'என்பது பழமொழி.


*தான் முன்னேற்றப்படிக்கட்டுகளில் ஏறும் போதே,தன் பின்னே பலரையும் கைகோர்த்து ஏற்றி விட்டவர். எப்படி???. தான், பல நபர்களுக்கு வேலை கொடுக்க வேன்டும் என்று எண்ணி 1940 களில் நமதூரில் 'ஜூபிடர் லெதர் ஒர்க்ஸ்'என்ற நிறுவன‌த்தை ஆரம்பித்து சுமார் 20லிருந்து 25 பேர் வாழ வழி வகுத்தவர்...

*தன்னுடைய சொந்த வீட்டின் கிணற்றிலிருந்து, நமது ஊர் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க,வீட்டின் வெளியே குழாய் வைத்து சப்ளை செய்து, தன்னால் இயன்றவரை தண்ணீர் பிரச்சனையை சமாளித்தவர்..

**மேலும் பஞ்சாயத்து தொட்டியிலிருந்து 2 இடத்தில் தன் சொந்த செலவில் பூமிக்கு அடியில் பைப் லைன் பதித்து, குழாய் வைத்து தண்ணீர் சப்ளை செய்ய‌ உதவியவர்..

*இளையான்குடி பெண்கள் உயர் நிலைப்பள்ளியை ஆரம்பிக்க 24/06/1963ல் தனது சொந்த கட்டிடத்தையும்(65,சுல்தான் அலாவுதீன் தெரு), பொருளும் கொடுத்து ஆரம்பித்து பின் முதல் தலைவர் ஜனாப் பி.எஸ். முஹமது இபுறாஹிம் அவர்களுக்குப்பின் தலைவராக இருந்து உழைத்து வந்தவர்..

*கவர்மென்ட் லோன் தங்கப்பத்திரம்,வார் ஃப‌ன்ட் (war fund), ஜவஹர்லால் நிதி மற்றைய மத்திய அரசு பொது நிதிகளுக்கு தாராளமாக கொடுத்தவர்..


*இளையான்குடியில் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி தொடங்குவதற்காக,முதல் கட்டிடம் கட்ட மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை(2 ஏக்கர் 78 செண்டு) கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்திருக்கிறார்..


**மேற்படி காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்திருக்கிறார்..

***மேற்படி காலேஜ் முதல் கரஸ்பான்டன்ட் ஆக பணி புரிந்து அக் கட்டிடத்தையும், காலேஜையும் திற‌ப்புவிழாச்செய்து,கல்லூரி முதல்வராக ஜனாப் கேப்டன் அமீர் அலி,மற்றும் திரு.ஆல்பர்ட் தேவசகாயம்; ஜனாப்.பாதுஸா ; ஜனாப் உஸ்மான்; ஜனாப் சிக்கந்தர்; ஜனாப் கமாலுதீன்;திரு ராஜ சேகரன் மற்றும் சில மிகச் சிறந்த பேராசிரியர்,விரிவுரையாளர்களையும் நியமனம் செய்தவர்.


அன்று விதைத்த வித்து இன்று பூத்துக் குலுங்குகிறது..


*இளையான்குடியில், இந்திரா காங்கிரஸை (ஜெ.காங்கிரஸ், இண்டிகேட்), தானும், சாத்தனியைச் சார்ந்த சீமான் அவர்கள், ஜனாப். ஜக்கரியா அவர்கள். ஜனாப். அமுக்குடியான் சுக்கூர் அவர்கள். திரு. முத்து அவர்கள். எல்லோரும் சேர்ந்து கட்சியை, தன்னுடைய சொந்த கட்டிடத்தில்(94,காமராஜர் ரோடு மேல் மாடி) ஆரம்பித்து,தானே தலைவராக‌ தேர்தெடுக்கப்பட்டும், கட்சி வளர வகை செய்தவர்..


**இந்திரா காங்கிரஸை இளையான்குடியில் ஆரம்பித்து வைத்தத‌ற்காக அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் கைப்பட எழுதிய வாழ்த்துக்கடிதம் பெற்றவர்..

*இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளி, 5வது நிர்வாக கமிட்டியில் பொக்கிசதார‌ராக இருந்து உள்ளார்..


*இளையான்குடி நெசவு பட்டடை ஜமாத் ட்ரஸ்ட் த‌லைவராகவும்,காரியதரிசியாகவும் இருந்து, மானேஜிங் ட்ரஸ்டியாக தேர்தல் மூலம் தேர்ந்த்தெடுக்கப்பட்டவர்.

** மேற்படி ஜமாத் பள்ளிக்கான பூர்வீக ஆதாரங்களைதிரட்டி ஆவணங்களை ஒழுங்குபடுத்தினார்..

***ஜமாத்துக்கு சொந்தமான வீடுகள்,கடைகள் ஆகியவற்றின் அடிமட்ட வாடகையை,தற்கால நிலமைக்கேற்ப,பல வழ‌க்குகள் மூலம் வெற்றிகண்டு வாடகை வருமான‌த்தை உயர்த்தினார்(இதனால் பல பகைகளை அல்லாவின் பள்ளிக்காக தேடிக்கொண்டவர்)..

****சிங்காரத் தோப்பின் முகப்பில்,தன்னுடைய செல்வாக்கால், ஆலிஜனாப்.தென்மலைக்கான் அப்துல் ரஹீம் அவர்களிடம் நன்கொடை பெற்று,' தென்மலைக்கான் மதுர கவி பாட்சா புலவர்' நினைவாக அரபி மத்ரஸா நிறுவியவர்..

*****சிங்காரத்தோப்பின் மதரஸாவுக்கு பக்கத்தில், தன் தமக்கை மரியம் பூவா நினைவாக காம்பவுன்ட் சுவர்,தன்னுடைய செலவில் எழுப்பினார்..


******பள்ளியின்,காமராஜர் ரோடு காம்பவுன்ட் சுவரை இடித்துவிட்டு,பள்ளியின் வருமான‌த்தை உயர்த்த,கீழே கடைகளும்,மேலே ரூம்களும் கட்டி விட்டவர்..

*******பள்ளிக்கென்று,ஒரு எலிமென்டரி ஸ்கூல் கட்ட,ஜாமாத்தாரிடம் அனுமதி வாங்கியவர்.இத் திட்டம் பிற்காலத்தில் நிறைவு பெற்றது..

********புதிய ஜும்மா பள்ளிக்கு ஜென்ரேட்டர் வாங்குவதற்காக அப்போதைய ட்ரஸ்டி ஜனாப் கே.டி.காஜா கமாலுதீனிடம் ஒரு தொகையை வழ‌ங்கினார்..

*கீழ முஸ்லீம் தெருவின் முடிவில்,தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 பெரிய கிணறுகள் போட்டு,தண்ணீரை பம்ப் மூலம் மேல் தொட்டியில் ஏற்றி, பெண்கள் மறைவாக குளிப்பத்ற்கு ஏதுவாக நாலாபுறமும் சுவர் கட்டி விட்டு,பெண்களின் பாராட்டைப்பெற்றவர்..


*அரியாண்டிபுரத்தில்,ஹரிஜன் குடியிருப்பு காலணிக்காக,தன்னுடய சொந்த நஞ்சை நிலத்தை (சுமார் 1 ஏக்கர் 70 சென்டு) அரசுக்கு தாணமாக வழங்கியுள்ளார்..

* இன்னும் நினைவில் சிக்காதவைகள் உள்ளன!


இவரைப் பற்றி பொதுவாக:

சீதன‌ம் கொடுப்பதும்,வாங்குவத‌ற்கும் மிக கடுமையான எதிரி.

இறைவனுக்கும்,தன் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கேனும் அஞ்சியதில்லை என்பது ஊரரிந்த உண்மை..

இவருக்கு நமதூரிலும்,சென்னையிலும் ஜூபிடர் லெதர் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும்,சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில், ஜூபிடர் லாட்ஜும்,சிங்கப்பூரில் காமன்வெல்த் ப்போர்ஸஸுக்கு அங்கீகாரம் பெற்ற கான்ட்ராக்டர் ஆகவும்,தொழில்கள் உள்ளன..

இவருடைய குடும்பமே,இளையான்குடியில் இருந்து முதன் முதலில் சிங்கப்பூரில் வசித்த குடும்பம் என்பது நிதர்சனமான உண்மை..

நமதூரில் விவசாயத்திற்கென்று வருமான‌ வரி கட்டியவர்கள் மூவர்,அதில் இவறொன்று,அண்ணாமலைச்செட்டியார்,தூங்காலயன் சிக்கந்தர் ஆகும்

1968,69 களில், 1 ஏக்கருக்கு நெல் விளைச்சல் மிக அதிகமான சாகுபடியைக்காட்டி இராமநாதபுர மாவட்டத்தின் சிறந்த விவசாயி என்று அரசாங்க கெஜட்டில் பதிவு பெற்றிருக்கிறார்..

1978,79 களில்,சிவகங்கை மவட்டத்திலே மல்பெரி செடி வள‌ர்த்து,அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து,ஆல் இந்திய ரேடியோவில் பேட்டி காண‌ப்பட்டவர்..

சிங்கப்பூரில், சுப்ரீம் கோர்ட்டில், தனக்கு கிடைக்காத நியாயத்தின் வழ‌க்கை,லன்டனில் உள்ள மிக உயர்ந்த கோர்ட் ஆன "பிரிவி கவுன்சில்" "PRIVY COUNCIL"க்கு எடுத்துச் சென்று,வழ‌க்காடி, வெற்றி கண்டு, சிங்கையில் பிரபல நியூஸ் பேப்பரான "ஸ்டெரைட் டைம்ஸ்" ல் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக, வெளி வந்தது. இந்த பெருமைக்குரிய ஒரே இளையான்குடியைச் சார்ந்தவர் யார் என்றால் 'அவரும் இவரே'

"மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
சிறு மாற்றுக்குறையாத மன்னவர்
இவரென்று போற்றி புகழ வேண்டும்"
"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர்.வி.எம். பீர் முஹமது" அவர்கள்
***************************************
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் பயோ டேட்டா படிக்க க்ளிக் செய்யவும்.
--> இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.-- மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
<--
************************************************
ணைய தள நிர்வாகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
New comment
fromAnonymous
toilycrazyboys@gmail.com

dateSat, Apr 18, 2009 at 10:12 PM
subject[இளையான்குடியின் வெளிச்சம்.]
.google.com

details 10:12 PM (5 minutes ago)

Anonymous has left a new comment on your post "மூன்றாம் வெளிச்சம்":

நான் கல்லுரியில் படிக்கும் காலத்தில் அன்றைய எங்களது முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள் ,அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் நான் கண்டதில்லை.

என்னுடைய அக்காலத்து க்ரூப் மாணவர்கள் யாரையும் கேட்டு உறுதி படுத்திக் கொள்ளலாம்.

இவ்விணைய தளத்து பதிவுகளை காணும் பொழுது மனம் வேதனை அடைகிறது.


சாகிர் உசேன் கல்லூரி பழைய மாணவன்
Posted by Anonymous to இளையான்குடியின் வெளிச்சம். at April 18, 2009 7:42 PM

Read more...

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART 2

அன்புச்சகோதரர் புதுகுளத்தான் அவர்களே!

விமர்சனத்திற்கு நன்றி..

"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! " என்ற‌ த‌லைப்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,

தாங்கள் குறிப்பிட்டபடி வெளிவந்து உள்ளது என்பதை, 1997 ல் வெளி வந்த வெள்ளி விழா ம‌ல‌ரில்,எங்கள் குழு படித்து, வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

இது மட்டுமல்ல‌ இன்னும் ' நிறைய' தவறுகள் உள்ளன..இவைகள் யாவும் நிச்சயமாக திருத்தப்பட வேன்டியவையாகும்..

இது சின்னப்புத்திக்காரர்களின் சின்ன சின்ன ஆசை..

அற்ப சந்தோசத்திற்கு அலைந்து, தை யா த க் கா என்று ஆடியிருப்பார்கள்.. உண்மையை அவன் (அல்லாஹ்), 'கவின் மிகு நாட்களில்' (ஹியாமத் நாட்களில்) 'விழா' அறிவிப்பான். ஆமீன்.ஆமீன்.யாரப்பில் ஆலமின்....

சந்தோசப்படுங்கள்!

நல்லவேளை 1997ல், வாஞ்சூர்பீர்முகமதும்,எம்.எஸ்.முஹமது உசேனும் உயிருடன் இல்லை, இப்போது தான் தெரிய வருகிற்து இதே சின்னப் புத்திக்காரர்களின் கைங்கரியத்தில் தானோ, என்னவோ முதல் ப‌ஞ்சாயத்து போர்டு தேர்தலில் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து ரசித்த மனம், இன்றும் ஆவலுடன் அலைகிறார்கள்..

முக்கியமாக, இருவரும் வீன் பெருமைக்கும், புகழ்ச்சிகளுக்கும் ஆசைப்பட்டவர்களில்லை, இருவருமே அமைதியான‌வர்கள், ஆரோக்கியமான சிந்தனை உடையவர்கள், இருவருக்குமே ஒரே தொழில்(தோல் பேக் செய்தல்) கூட, ஒரு சில கல் மனம் கொன்ட கயவர்களின் வேலைகள், இப்படி தான் தோன்றிதனமாய், அறிவு ஆறாக‌, தம்மைப்பற்றி நினைத்துக் கொன்டு எழுதுபவர்களை, அதுவும் அவ்விருவரும் உயிரோடு இல்லாத போதிலும் எழுதுபவர்களை? உன்னிடமே விட்டு விடுகிறோம் அல்லாவே!

இம் மலரில் நிறைய தவறுகளும். உண்மை ம‌றைக்கப்பட்டும் உள்ளதை நாம் அறிவோம்..இவையெல்லாம் ஒவ்வொன்றாக < வெளிச்சத்திற்கு > கொன்டு வரப்படும்..
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை...........
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை......."
***********************


CLICK ON THE PHOTOS TO SEE IN LARGE SIZE



கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழ்:




இணைய தள குழு..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
NEW LATEST COMMENT RECEIVED.
ஐ.என்.பி.பள்ளிவாசல் நடப்பு பிரச்சனைகள்


fromAnonymous
toilycrazyboys@gmail.com

dateSat, Apr 18, 2009 at 9:13 PM
subject[இளையான்குடியின் வெளிச்சம்.] New comment on ஐ.என்.பி.பள்ளிவாசல் நடப்பு பிரச்சனைகள்.
mailed-byblogger.bounces.google.com

Anonymous has left a new comment on your post "ஐ.என்.பி.பள்ளிவாசல் நடப்பு பிரச்சனைகள்":

This episode reminds me of Dr.Mathathir's saga of Malaysia.Dr.Mahathir placed Malaysia in the world map.The moment he stood down there were amateurish attempts to wipe off his legacy.

But the truth prevailed ultimately.Rewriting Indian history had also been the RSS and BJP's forte.

Thanks to the power of internet that the truth somehow emerges.

Again a vote of thanks to Ilayangudians residing around the globe who sees to that justice takes its rightful place.

I too read a copy of the so called ,"The History of Illayangudi" by one Capt.Amir Ali and two others.The contents come across as self-glorification of an individual with vested interest.

Such blatant travesty of obfuscation and half-truths must be exposed.For the benefits of the future and our youth.Truth should be told as it was..

Its is indeed gratifying some investigative journalism had been done in this blog.
With facts,figures and historical documents.Great writing.

Wassalam.

Posted by Anonymous to இளையான்குடியின் வெளிச்சம். at April 18, 2009 5:29 PM



++++++++++++++++++++++++++++++++++++
COMMENT RECEIVED FROM “புதுக்குளத்தான்.”1 comments:Anonymous said...

இளையாங்குடியர்களே, இணைய தள நிர்வாகிகளே,

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தாளாளர் வி.எம். பீர் முஹம்மது என்று அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் மாண்பு மிகு அமைச்சரின் வருகை பற்றிய தகவல் மூலமாக அரசாங்க ஆவணங்களிலும்,

கல்லூரியின் முதன் முதல் தாளாளரான ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களுக்கு பிறகு கல்லூரியின் இரண்டாவது தாளாளரான ம‌றைந்த‌ ம‌திப்பிற்குரிய‌ வி.எம். முஹ‌ம்ம‌து காசிம் அவ‌ர்க‌ளின் லெட்ட‌ர் பேடில் க‌ல்லூரியின் த‌லைவ‌ர் அவ‌ர்க‌ள் கையொப்ப‌ம் இட்டு 27.4.87 ல் ,

ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களின் ம‌றைவுக்கு நிறைவேற்றி அனுப்பியிருக்கும் இர‌ங்க‌ல் தீர்மான‌த்திலும்,

"க‌ல்லூரியின் ஆர‌ம்ப‌ முத‌ல் அத‌ன் வ‌ளர்ச்சிக்கு பாடுப‌ட்ட‌வ‌ரும்,முன்னால் தாளாள‌ரும், கல்லூரியின் முத‌ல் க‌ட்டிட‌த்தை நிர்மானித்த‌வ‌ருமான மர்ஹூம் ஹாஜி வி.எம். பீர் முஹ‌ம்ம‌து "

என‌ உண்மை ஆணி அடித்தாற்போல் ‌ ப‌திவு ஆகி இருக்கும் போது,

http://zhcollege.ilayangudi.org/ என்ற‌ இணைய‌ த‌ள‌ ப‌க்க‌த்தில்

Founders
-----------
(Marhoom). Janab. Ameen Nainar Howth (Avl)(Marhoom).
Janab. O.R. Ibrahim Ali (Avl)(Marhoom).
Janab. Sowkath Ali Ambalam (Avl)
Haji. K.A. Abdul Karim (Avl)

என்று ம‌ட்டுமே இருக்கிற‌து.

அப்பட்டியலில்

1."க‌ல்லூரியின் ஆர‌ம்ப‌ முத‌ல் அத‌ன் வ‌ளர்ச்சிக்கு பாடுப‌ட்ட‌வ‌ரும்,முன்னால் தாளாள‌ரும், கல்லூரியின் முத‌ல் க‌ட்டிட‌த்தை முழுமையாக‌ நிர்மானித்து அதனிலிருந்தே கல்லூரி தொடங்கி செயல்பட வித்திட்டரான‌ மர்ஹூம் ஹாஜி வி.எம். பீர் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் பெய‌ர் ஏன் FOUNDER வரிசையில் பொரிக்கப்படாமல் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து ?

"2. இன்ற‌ள‌விலும் கல்லூரியில் பொது ஜன பார்வைக்கு வைக்க‌ப்பட்டிருக்கும் க‌ல்லூரியின் தாளாள‌ர்க‌ள் பட்டிய‌ல் அறிவிப்பு ப‌ல‌கையில் கல்லூரியின் முதன் முதல் தாளாளரான ஹாஜி வி.எம். பீர் முஹம்மது அவர்களின் பெயர் ஏன் பொரிக்கப்படாமல் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறது?

இளையாங்குடியர்கள் சிலரின் காழ்ப்புணர்ச்சிகளை களைந்து,

ஆதாரங்களின் அடிப்படையில் ஆவன செய்ய தயக்கம்?

பலரை சில நாட்களும், சிலரை பல நாட்களும் திசை திருப்பலாம்.

எல்லோரையும் எல்லா நாட்களுமா?

அனைவரும் ஆவணங்களை ஆழ்ந்து படித்து சிந்தியுங்கள்.

புதுக்குளத்தான்.April 17, 2009 12:27 PM

Read more...

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்....PART 1.

>> Tuesday, April 14, 2009

" வளர்ந்த கதை மறந்து விட்டால் கேளடா கண்னா!
மறைத்து வைத்த ஓவியத்தை பாரடா கண்னா


'ஓதுக'
உம் இறைவன்
திருபெயரால்
:

இளையாங்குடி கல்லூரி கழக அறிக்கை. 1970

படித்து பல‌ அறியாத உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து
வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு
CLICK> பக்கம் 6
க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்
CLICK> பக்கம் 7

CLICK> பக்கம் 8

CLICK> பக்கம் 9

CLICK> பக்கம் 10

CLICK> பக்கம் 11

CLICK> பக்கம் 12

CLICK> பக்கம் 13

க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.
CLICK> பக்கம் 15

CLICK> பக்கம் 16
க‌ல்லூரிக்கு நில‌ம் தான‌ம் செய்த‌வ்ர்க‌ள்
CLICK> பக்கம் 17

க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்
CLICK> பக்கம் 18

க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.
CLICK> பக்கம் 19


>மேலே கண்ட அறிக்கையில் சிகப்பு மையால் கோடிட்ட வாக்கியத்தின்படி, 1969ல் இளையான்குடி வந்து,



குறிப்பு:‍:‍= இந்த 19 பக்கங்களை 'Save' செய்து,பிறகு பொறுமையாக‌ படிக்கலாம். இதனால் 'Internet' செலவு குறையும்

ILAYANGUDI CITIZEN. என்ற‌ பெய‌ரில் வந்த‌ க‌ருத்து.
1 comments:
Anonymous said...
இளையாங்குடியின் வெளிச்சம் இணைய தள நிர்வாகஸ்தகர்களே,
Nidur info என்ற இணைய தளத்தின் "தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் - பட்டியல்" ‍ என்ற பக்கத்தில்:‍
“ டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது ”. என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கிற‌தே ? ? ?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி அவ‌ர்க‌ளின் பெயரை ம‌ட்டும் அவர் கல்லூரி உருவாக்கத்தின் அச்சாணி என்ப‌தால் தானே அவர் ஒருவ‌ர் பெய‌ர் கூற‌ப்ப‌டுகிற‌து?

அவ்விணைய தளபக்க முகவரி:
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=133:2008-08-24-14-32-59&catid=63:2008-08-24-03-00-04&Itemid=99

உண்மை அப்படியிருக்க நீங்க‌ள் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள்.
மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி அவ‌ர்க‌ளின் பெயர் 19 ப‌க்க‌ங்கள் அறிக்கைகளில் எங்கே?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி இளையாங்குடி கல்லூரி கழகத்தின் ஸ்தாபகரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி ரூபாய் 11.00 செலுத்திய மெம்பரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி கல்லூரிக்கு நிலம் தானம் செய்தவரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி கல்லூரிக்கு தன் நிலத்தை விற்ற‌வரா?

நான் ஒரு முட்டாளுங்கோவ். எனக்கு உண்மை தெரிய வேனுங்கோவ். ILAYANGUDI CITIZEN.
===============================================================
OUR REPLY TO "ILAYANGUDI CITIZEN" FOR HIS COMMENTS
அன்பார்ந்த சகோதரரே! அஸ்ஸலாமு அலைக்கும்.தங்கள் விமர்சணத்திற்கு நண்றி.. இது விசயமாக தாங்கள் குறிப்பிட்ட இணையதள‌த்திற்கு கீழ்கண்டவாறு விளக்கம் கேட்டுள்ளோம்.பதில் வந்தவுடன் வெளியிடுகிறோம். கேப்டன் என்.ஏ.அமீர் அலி அவர்கள் கல்லூரிக்க்ழக அங்கத்திணராகும்,அவருடையெ பணியும் பாரட்டுக்குரியது..
நிர்வாகம்.
= = = = = = = = = =
Nidur info இணைய தளத்தினருக்கு
அன்பார்ந்த சகோதரரே, அஸ்ஸலாமு அலைக்கும்,தங்கள் இணைய தளத்தில்,‍/தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் - பட்டியல்/
முஸ்லிம்களின் கல்விச் சேவை/பேரா.ஜெ.ஹாஜாகனி/
டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி/கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது. இப்படியாக ப‌திவு வெளியாகி உள்ளது

எங்கள் ஊர் கல்லூரியைப் பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்டமைக்கு முதல் நண்றி..
ஆனால் இது தவறான,மிகைப்படுத்தப்பட்ட தகவலாகும்.இக் கல்லூரி 1970ல் தொடங்கப்பட்டது என்பது மட்டுமே உண்மை.

இக்கல்லூரி இளையான்குடி கல்லூரிக்கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பல ஊர் பெரியோர்கள், நன்மனம் கொன்டவர்கள்,ஆகியோரின் கடும் முயற்ச்சியாலும்,எங்கள் கல்லூரிக்கழக அறிக்கையில் கண்டபடியும்,

ஹாஜி.வா.மு. பீர்முஹமது அவர்கள் கல்லூரிக்கு நில தானமும்,முதன் முதல் கட்டிடத்தை தன் சொந்த செலவிலும், தன் உழைப்பாலும் கட்டி முடித்து,தானே கல்லூரியின் முதல் தாளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டும், அன்றைய கல்வி அமைச்சர் மான்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில், கண்னியமிகு காயிதே மில்லத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..இது அழியாச்சரித்திரம்.

இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர் (பிரின்ஸிபல்) , பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து,



ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்கி செயல் பட செய்தார்கள்..


கல்லூரி தொடங்கிய உடன் கல்லூரியின் முதல் பிரின்ஸிபல் ஆக ஆலிஜனாப். கேப்டன். என்.ஏ.அமீர் அலி அவர்கள் பல வருடங்கள் பணியாற்றி,கல்லூரியின் தரத்தை மிக நன்றாக உயர்த்தினார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை..

தாங்கள் வெளியிட்ட செய்தியை கேப்டன் அமீர் அலியின் கவணத்திற்க்கு வந்திருந்தாலும்,மிக கண்டிப்பாக உங்களிடம் மறுப்பு அறிக்கை அனுப்பி இருப்பார்கள்.

ஆகவே தாங்கள் தயவுசெய்து உங்களது தவறான அறிக்கையை சரிசெய்து வெளியிடவும்.. தாங்களுடைய பதிலை விரைவில் எதிர் பார்க்கிறோம்
நன்றி.
இளையான்குடிவெளிச்சம் April 15, 2009 3:02 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16.04.2009
COMMENT 2 . RECEIVED FROM “புதுக்குளத்தான்.”
Anonymous said...
டாக்ட‌ர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,
"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! " என்ற‌ த‌லைப்பில்
"1970 மறைந்த வள்ளல் ஹாஜி வி.எம். ஜனாப் வி.எம்.பீர். முஹம்மது நன்கொடையில் கல்லூரியின் முதல் கட்டிடம் உருவாகிறது. மறைந்த வள்ளல் எம்.எஸ் முஹம்மது உசேன் நன்கொடையில் அக்கட்டிடம் நிறைவு பெறுகிறது."
என்று உண்மைக்கு புறம்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது உங்க‌ளுக்கு தெரியுமா?

நில‌ம்,பத்திர பதிவு செல‌வு, கல்லூரி தொடங்கி செயல்பட முழுமையான‌ க‌ட்டிட‌ம் அனைத்துக்கும் உழைப்புடன் தன் சுய‌ பொருள் செல‌விட்ட‌வ‌ர் வாஞ்சூர் பீர் முஹ‌ம்ம‌து என்ப‌து ப‌ரிபூர‌ண‌ உண்மை என்பதை எப்படி எபடியெல்லாம் திரிக்கப்படுகிறது.!!!

எந்த செய்தியையும் திரித்து ப‌ல‌ முறை திரும்ப‌ திரும்ப கூறி உண்மையாக்குவ‌தில் வல்ல‌வ‌ர்க‌ள் முழுக்க முழுக்க அமெரிக்க‌ர்களா? கொஞ்சம் கொஞசம் இளையாங்குடியர்களா?.

எங்கே உங‌க‌ள் புல‌னாய்வை தட்டி விடுங்க‌ளேன். பதில் கூறுங்களேன்.

புதுக்குளத்தான்.April 16, 2009 5:27 PM
t.a.j.arabath sickander said...
T.R.S. endru ilayangudi ill alaikkappadum iron business-iy ilayangudi yil thoodangiyavarum,I.M.P.T.pallivasal ex.trusty markum.T.R.SICKANDER avarkal kallurikku thanamaga nilam koduthullargal.
April 19, 2009 6:26 PM

Anonymous said...
க‌ல்லூரி க‌ழகத்திடமிருந்து ஆரம்ப முதலாக‌ தன் உழைப்புக்கு ஊதியம் பெற்றுக்கொண்டும் (க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து பக்க‌ம் 3 ) கல்லூரி கழக பொருளாதாரத்திலேயே வெளிநாடு உள்நாட்டு பயணங்கள் , விருந்துபசரிப்புகள் அனுபவித்து கல்லூரிக்காக வசூல் செய்தவர்கள் மட்டுமே கல்லூரியின் ஸ்தாபகர்கள் என நிலைபெற செய்வது ஏன்?இளையாங்குடியர்கள் உணரும் காலம் எப்பொழுது? அக்பர் ஆலம்.
July 5, 2009 8:31 AM
++++++++++++++++++++++++++++++++++++++
அன்புச்சகோதரர் புதுகுளத்தான் அவர்களே!
விமர்சனத்திற்கு நன்றி..
பதிலை கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART 2 ல் காணவும்.




Read more...

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP